Friday, February 4, 2011

சுயநலமின்றி சேவை செய்வோம்


* பணமும், வசதி வாய்ப்புகளும் வந்து போகக்கூடியவை. 
மனித சமூகம் செல்வத்தை தேடி ஓடிக் கொண்டு இருக்கிறது. 

வாழ்க்கை பொருளுடையதாக இருக்கவேண்டுமானால், பொருள் தேடுவதோடு அருளையும் தேட வேண்டும்.

* சுயநலமற்ற சேவை மட்டுமே மனசாந்தியைத் தரவல்லது. 
நமக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை சேவை வெளிக்கொணர்ந்து விடும் ஆற்றல் கொண்டது.

* தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருக்குமானால், 
முதலில் தொண்டனாக சேவை செய்யும் அனுபவத்தைப் பெறவேண்டும்.

* எவன் ஒருவன் சுகம், துக்கம் எல்லாவற்றையும் சமமாக எண்ணுகிறானோ
அவனே வாழ்வின் உண்மையை உணர்ந்தவன் ஆவான்.

* கடந்த காலம் திரும்புவதில்லை. வருங்காலம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. 
நிகழ்காலத்தை நல்ல முறையில் கழிப்பதே அறிவாளியின் செயல்.

* பிறக்கும்போது ஆபரணங்களுடன் பிறப்பதில்லை. ஆனால், 
முற்பிறவியில் செய்த செயல்களின் வினைப்பயனை அணிந்து கொண்டு வருகிறோம். யாராக இருந்தாலும் இதில் தப்ப முடியாது.

-சாய்பாபா

No comments:

Post a Comment