Saturday, December 24, 2011

Must Read -Student: Why do we all want to live?

Student: Why do we all want to live?


J Krishnamurti: Don't laugh because a little boy asks, when life is so transient, why do we crave to live? Isn't it very sad for a little boy to ask that question? That  means he has seen for himself that 
everything passes away. Birds die, leaves fall, people grow old, man has disease, pain, sorrow, suffering; a little joy, a little pleasure and unending work. And the boy asks why do we cling to all this? He sees how young people grow old before 
their age, before their time. He sees death. And man clings to life because there is nothing else to cling to. His gods, his temples, don't contain truth; his sacred books are just words. So he asks why people cling to life when there is so much 
misery. 
You understand? 
What do you answer? 
What do the older people answer? 
What do the teachers of this school answer? There is silence. 
The older people have lived on ideas, on words and the boy says, "l am hungry, feed me 35 with food, not with words." He does not trust you and so he asks, "Why do we cling to all this?" Do you know why you cling? Because you know nothing else. You cling to your house, you cling to your books, you cling to your idols, gods, 
conclusions, your attachments, your sorrows, because you have nothing else and all that you do brings unhappiness. To find out if there is anything else, you must let go what you cling to. If you want to cross the river, you must move away from 
this bank. You cannot sit on one bank. You want to be free from misery and yet you will not cross the river. So, you cling to something that you know however miserable it is and you are afraid to let go because you don't know what is on the 
other side of the river.  


Full Book : http://www.messagefrommasters.com/Ebooks/Jiddu-Krishnamurti-Books/Jiddu_Krishnamurti_on_Education.pdf

Friday, December 23, 2011

சிந்தனைத்துளிகள் -டால்ஸ்டாய்


அறிவுரைகளைக் கேட்பதிலும் படிப்பதிலும் மட்டுமே காலத்தைச் செலவிடாமல் அவற்றைச் செயல்படுத்துவதிலும் காலத்தைத் திருப்புங்கள்.

கல்வியின் வேர்கள் கசப்பானவை. ஆனால் அதன் கனிகள் இனிப்பானவை.

பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்கியவனே வீரன்.

நான் அனைத்தையும் நேசிக்கிறேன். அதனால்தான் என்னால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது

படகைத் திருப்புவதற்கு உதவியாக இருப்பது சுக்கான். செயலைத் திருத்துவதற்கு உதவுவது எண்ணம்.

போரும் அமைதியும்-டால்ஸ்டாய்

இதைப் பற்றி எழுதுவதற்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும் எனலாம். ஆனால் படிப்பவனுக்கு எதையும் சொல்ல உரிமை போதும். தகுதி தேவையில்லை.உலகின் மிகச் சிறந்த நாவல். என் மனைவி இதை நாவல் என்றே ஒத்துக் கொள்ளவில்லை. அவள் படிப்பது நாவலாம். இது வேறோ ஒன்றாம். இருக்கலாம். எல்லோராலும் எல்லாவற்றையும்  உட்கார்ந்து படித்து விட முடியாது.
நீண்ட காலத் தேடுதல். எந்த நூலகத்திலும் கிடைக்கவில்லை. காசு  கொடுத்து வாங்கவும் வசதியில்லை. அண்மையில் ஆசை கை கூடியது. சுளையாக 1000 இந்திய ரூபாய்கள் கொடுத்து வாங்கினேன். மதுரை சர்வோதய புத்த நிலையத்தில். அங்கும் இருந்தது ஒரே ஒரு புத்தகம் மட்டுமே. வேறு எங்கு கிடைக்கும் என்றும் தெரியவில்லை.
சீதை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள். மொத்தம் 2500 பக்கங்கள் தேறும்.தமிழாக்கம் செய்திருப்பவர் சொக்கலிங்கம். ஆங்கிலத்தில் என்னிடம் இருக்கிறது. நூலகத்திலும் கிடைக்கும். ஆனாலும் தமிழில் படிக்க வேண்டும் என்று காத்திருந்து சாதிதேன்.இருந்தாலும், இந்த மொழி பெயர்ப்பு அவ்வளவு தூரம் எடுபடவில்லை. உதாரணத்துக்கு திலகவதி மொழி பெயர்த்த குற்றமும் தண்டனையும்-உடன் ஒப்பிட முடியாது. ஆனாலும் சொக்கலிங்கம் பாராட்டுக்குரியவர். இந்தப் பெரிய புத்தகத்தை வாசித்து முடிக்கவே ஒரு மாதம் தேவைப்பட்டது. அதை படித்து புரிந்து மொழி மாற்றுவது கண்டிப்பாக இலேசுப் பட்ட காரியம் கிடையாது.அதுவும் சிலர் நான் அதைப் படிச்சேன், இதைக் கிழிச்சேன் என்று புலம்பிக் கொண்டு திரிகையில் இது ஒரு ஆக்கபூர்வமான செயலாகும்.
இனிப் புத்தகத்துக்கு வருவோம்.
எனக்கென்னவோ உலகின் சிறந்த நாவல் என்பது அதிகம் போல இருக்கிறது. டால்ஸ்டாயின் அனேகமான படைப்புகள் ஓரளவுக்கு வசதி படைத்தவர்களைச் சுற்றியே இருக்கும். புத்துயிர்ப்பு அல்லது அன்னா கரினினா. மொத்தமாக வசதி படைத்தவர் வீட்டு பிரச்சினைகளையே மையமாகக் கொண்டிருக்கும். அவரும் அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் இருக்கலாம். கார்க்கியோ, தஸ்தாயேவ்ஸ்க்கியோ இதில் அவரிடம் இருந்து வேறு படுகிறார்கள்.
படித்துக்கொண்டு போகும் பொழுதெல்லாம் யாரை மையமாகக் கொண்டு எழுதுகிறார் என்பதை புரிந்து கொள்ளவே சிரமமாக இருக்கும். மூன்று பாகங்களில் மூன்று பேரை வைத்து சம்பவங்களினை  நடத்திச் சென்றிருப்பார். எனக்கென்னவோ பீயர் தான் கதா நாயகன் என்று தோன்றியது. பீயரின் குணாதியசங்கள் எனக்கும் ஒத்து வந்ததாலோ அல்லது டால்ஸ்டாய் தன்னையே பீயருக்கு கொடுத்திருந்ததாலோ தெரியவில்லை.
ஆரம்பமே ஆட்டம்,பாட்டம்,கூத்து என்று அமர்க்களப் பட்டிருக்கும். புத்தகம் பூராவுமே விருந்துகளும்,போதையேறிய  சம்பவங்களும் விரைவிக் கிடக்கும். வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அங்கு நிகழும்  கேவலமான அரங்கேற்றங்களை படம் பிடித்துக்காட்டியிருப்பார். ஒவ்வொருவரும் தமது பெண்களுக்கு மாப்பிள்ளை பார்ப்பதினையும், தப்பான சேர்க்கைகளை கூட்டுவதினையும், தத்தமது  சுயலாபத்திற்காய் எந்த மாதிரி தகிடுத்தனம் பார்க்கிறார்கள் என்பதையும் ஆற அமர விளக்கியிருப்பார். ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ்வொரு பிரச்சினை. அதில் சிக்கிக் கொண்டு எப்படி கதி கலங்குகிறார்கள் என்பதை படித்தால் தான் தெரியும்.
பீயர் வெளி நாட்டில் படித்து விட்டு வந்து சந்தர்ப்பத்துக்கு உதவாத கதை பேசிக் கொண்டிருப்பதாகக் காட்டி அவர் மூலம் நெப்போலியனின் உயர்வுகளை கண்டிப்பாக சொல்லி இருக்கிறார். சாதாரண ஒருவன் சக்கரவர்த்தியாவது இலேசுப் பட்ட விடயம் அல்ல. ஏராளமான சரித்திர சம்பவங்களை ஒப்பிட்டு குறியிட்டுருப்பார். பீயர் தப்பான தாய்க்கு பிறந்த படியால் அவருக்கு ஏற்படும் அவமானங்களையும், அவர்  எப்படி அவற்றை இலகுவாக எடுத்துக் கொள்கின்றார் என்பதையும் சுட்டி அதனால் அவர் எப்படி மிகவும் முக்கியமான விடயங்களினையும் மறந்து  போகின்றார் என்பதையும் சுட்டுகிறார். கண்டிப்பாக அவரது இந்தப் போக்குகள் எவ்வளவு துரதிஸ்டமானவை என்பதையும் அவர் கடைசி வரை உணரவே விடவில்லை.
பீயர் எவ்வாறு திருமண் பந்தத்திற்குள் இழுக்கப் படுகின்றார், கூடாத சேர்க்கைகள் உள்ள மனைவியின் கணவன் எந்தளவுக்கு நொந்து போவான் என்று பக்கம், பக்கமாக விபரித்து கடைசியில் அவளின் எண்ணத்துக்கே அவளை விட்டு விடுவது வரை ஒரே களேபரம் தான். அன்னா கரினினாவிலும்,புருசன் சொல்லுவான் நீ எப்படியாவது இருந்துவிட்டுப் போ,ஆனால் எனக்கு மனையாக இரு என்று. ஏன் இந்த தொடர்பு என்று தெரியவில்லை.
பீயரின் மனைவி கெலன். ஏற்கனவே சகோதரனுடன் தப்பான உறவிலலிருந்தாள் என்று சொல்லுகிறார். அவளுக்கும் ஊரில் உள்ள பெரிய பிரபலங்களுக்கும் தவறான சேர்த்தி உள்ளது என்று சொல்லும் அவர் அவற்றை விபரிக்க மறுத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். அவளுடன் டோலகோவ் என்பனுக்கு இருந்த உறவால் பீயர் டூயல் சண்டைக்கு போவதும் ,பின்னர் வருந்துவதும் அதனால் மனைவியுடன் ஆக்ரோசத்துடன் ச்ண்டைக்கு தயாராவதுமாக இருந்தாலும் ஏனோ சில படிகளுக்கு மேல் போகவில்லை. இங்கு அவர் பீயர் ஆத்திரம் அடைந்து கோபப்பட்டால் எவ்வளவு பலமிக்கவாகிறார் என்று காட்டும் டால்ஸ்டாய் எந்தக் கட்டத்திலும் பீயர் அதை தனக்காக உபயோகிக்க விடவில்லை.
டால்ஸ்டாய்  எவ்வளவு காலம் எடுத்து இதனை எழுதினார் என்றும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். புறச் சூழ் நிலைகள் அவரை நிறையவே மாற்றி மாற்றி எழுத வைத்துள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  உதாரணத்துக்கு கெலனையே எடுக்கலாம். தம்பியுடன் தப்பான உறவு . கண்ட பயலுகளுடன் சேர்த்தி என்று போகும் அவள் எப்பொழுதும் தம்பியுடனோ, மற்றவர்களுடனோ எப்படி இருந்தாள் என்பதை சொல்லவில்லை. ஒரே ஒரு வசனம் மட்டுமே வருகிறது.மிகவும் பிரபலமாக இருந்த அவள் நெப்போலியன் ரஷ்யாவுக்குள் வந்ததிலும் அவளின் செய்திகள் முக்கியம் என்று காட்டிய டால்ஸ்டாய் அவளின் சாவை ஒரே வசனத்தில் முடிக்கின்றார்.  அடிக்கடி அவரது இந்த ஒரு வசனம்(கள்)கடுப்பாக்குகின்றது.
பீயரை மனைவியை வைத்தே உயர்வாக்குகின்றார். இந்தக் காலத்து மொழியில் பெண்ணுரிமை. அவர் எப்படி சிந்திக்கின்றார். அவள் கெட்டுப் போன ஸ்திரி என்று தெரிந்தும் அவளை தொந்தரவு செய்யாமல் எப்படி சுதந்திரமாக விட்டு வைக்கின்றார் என்று சொல்லும் டால்ஸ்டாய் ஏன் என்று கடைசி வரை புரியவைக்கவில்லை.
பீயர் பணக்காரராக இருந்தாலும் எவ்வளவு தூரம் மடத்தனமாக இருக்கின்றார். சாதரணமான ஒருத்தனுக்கு தெரியும் விடயங்கள் அவருக்கு ஏன் புரிய மாட்டென்கிறது. சண்டைக் களத்துக்கு சுற்றிப் பார்க்க ஏன் போகின்றார். அது மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் சோதனையான விடயம் என்பது அவரது சிந்தனைக்கு எட்டவில்லையா? எல்லாம் காரணத்தோடு தான்.
தொடரலாம்………..

அகிரா குரோசவாவின் 'இகிரு' : வாழ்வதின் பிரியம்

சு. யுவராஜன்
2003-ல் ஒரு பிற்பகல் வேளையில் பல்கலைக்கழகத்தின் தமிழ் நூலகத்தில் புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தவறு, பெண்களைப் நோக்கும் அதே ஆவலோடு புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் சரி. எப்போதும் மேயும் சிறுகதை, நாவல் பகுதியிலிருந்து விலகி மொழிப்பெயர்ப்பு நூல்கள் இருந்த பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்தேன். ஆங்கிலத்தில் நேரடியாக வாசிக்கும் மனதிட்பம் அப்போது இல்லாததால் மொழிப்பெயர்ப்பில் கொஞ்சம் காலூன்றிய பிறகு நேரடியாக வாசிக்கலாம் என முடிவு செய்திருந்தேன். இரஷ்ய சிறுகதைகள்தான் என்னுடைய முதல் தேர்வு. புத்தகங்களை ஒவ்வொன்றாக இழுத்து இழுத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் ‘ரஷோமோன்’ திரைக்கதை மொழிப்பெயர்ப்பை எதேச்சையாகக் கண்டேன். அகிரா குரோசாவா என்ற பெயரை முதன் முதலில் அறிந்து கொண்ட நாள் அது.

அப்போது மலாயா பல்கலைக்கழகத்திலுள்ள ஆசியா ஐரோப்பிய மையத்தில் ஒவ்வொரு புதன்கிழமை எட்டு மணியளவில் உலகத் திரைப்படங்கள் ஒளியேறும். அதுவரை வெளிநாட்டுப் படங்கள் என்றால் ஹாலிவூட் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன். புரியாத மொழிகளில் மனதை நெகிழ வைக்கும் படங்கள் எனது சிந்தனையில் புதிய திறப்புகளுக்கு வழிகோலின. புதுமைப்பித்தன், வண்ணநிலவன், ஹெமிங்வே, தோல்ஸ்தோய் போன்றோரின் வரிசையில் கில்லொவ்ஸ்கி, மஜிட் மஜிடி, வால்டர் செல்லாஸ், குரோசாவா போன்றவர்களும் முக்கியமான படைப்பாளிகளாக மனதில் இடம்பெற தொடங்கினர்.

இதன் அடிப்படையில்தான் ரஷோமோன் திரைக்கதையை ஆவலோடு படித்தேன். திரைக்கதையை வாசிப்பது முதல் முறையாதலால் அதன் வடிவத்தை அனுபவிக்க கடினமாக இருந்தது. இருப்பினும் கதையின் புதுமை ஈர்ப்பாக இருந்தது. உடைந்த கண்ணாடி சிதறல்களின் பிரதிபலிப்பாக இருக்கும் உண்மையின் சாராம்சத்தை ஆராய்கிறது ரஷோமோன். படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென தேடத் தொடங்கினேன்.

எனக்கு முதன் முதலாக கிடைத்த குரோசாவாவின் படம் ரென் (Ran). படம் பார்க்கத் தொடங்கியபோது மணி இரவு 11 இருக்கும். காலையில் எழுந்தபோது அரை மணி நேர படத்தின் கதைதான் ஞாபகத்தில் இருந்தது. படம் என்னைக் கவராதது படத்தின் குற்றமல்ல. தட்டச்சு செய்யவும், சினிமா பாடல்களை மட்டும் கேட்கவே பயன்படுத்திய பழைய கணினியும், நல்ல படங்களை இரசிக்கத் தெரியாத மேலோட்டமான என்னுடைய இரசனையுமே காரணம்.

வாழ்க்கை சில நேரங்களில் அஞ்சல் ஓட்டத்தைப் போன்றது என்பர். ரென் எனக்காக வாங்கிய படமல்ல. என் தம்பி காளிதாஸிற்காக வாங்கப்பட்டது என்பதை தாமதமாக புரிந்துக் கொண்டேன். விடுமுறைக்கு வீடு திரும்பியபோது ரென் பட விசிடியை கொண்டு சென்றிருந்தேன். அடுத்த விடுமுறையின் போது குரோசாவாவின் ‘யோஜிம்போ’ (Yojimbo), ‘செந்தாடி’ (Red beard) போன்ற படங்கள் இருப்பதைக் கண்டேன். காளி தேர்ந்த ரசிகனாய் உலகத் திரைப்படங்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினார். குரோசாவாவின் 90 சதவித படங்கள் அவரிடம் இருந்தன.

இருப்பினும் நான் நெடுநாட்களாக பார்க்க எண்ணியிருந்த ‘இகிரு’வின் டிவிடியைச் சென்ற ஆண்டுதான் காளி வாங்கியிருந்தார். நான் இகிருவை பார்ப்பதற்காக துடித்துக் கொண்டிருந்ததிற்கு முக்கிய காரணம் மார்லோன் பிராண்டோதான். ஒரே துறையை சார்ந்தவர்கள் மற்றவர்களின் திறமையைப் பாராட்டுவது அரிது. இகிருவை பார்த்துவிட்டு அசந்து போய் மனதார தன் நண்பர்களிடம் பாராட்டி பேசினாராம் பிராண்டோ. என்ன ஆச்சரியம் பாருங்கள். இகிருவின் நாயகனுக்கு வயிற்று புற்று நோய். அம்மாவும் புற்றினால் வயிறை இழந்து சென்ற ஆண்டுதான் கொஞ்சம் கொஞ்சமாக தேறிக் கொண்டிருந்தார். எனக்கு அஞ்சல் ஓட்டம் மீண்டும் நினைவுக்கு வருகிறது.

காஞ்சி வதனாபே சுமார் முப்பது வருடமாக அரசாங்க அதிகாரியாக பணிப்புரிபவர். வேலையில் சவாலில்லாததால் ஈடுபாடில்லாமல் இருக்கிறார். மற்ற அதிகாரிகளும் அப்படியே. தங்கள் பகுதியில் விளையாட்டு திடல் பழுதாகிவிட்டதை முறையிட வரும் பெண்களிடம் மெத்தனமாக இருக்கின்றனர். அவர்களை அலைக்கழிக்க வைக்கின்றனர். வதனாபேவிற்கு வயிற்று வலியால் சரியாக சாப்பிடக் கூட இயலவில்லை. சாப்பிட்டதும் கொஞ்ச நேரத்தில் வாந்தியாக வந்து விடும். அவருடைய அலுவலகத்தில் பணிப்புரியும் கீழ்நிலை ஊழியரான பெண் மட்டும் எப்போதும் உற்சாகமாக இருக்கிறார்.

வதனாபேவிற்கு வயிற்று புற்று என்பது உறுதியாகிறது. மிகவும் உடைந்து போய் தன் நோய் பற்றி தன் மகனிடம் சொல்ல முயல்கிறார். மகனோ அவரது பணத்திலேயே குறியாக இருக்கிறார். மனம் நொந்து போய் மது விடுதிக்குச் செல்கிறார். அங்கு அறிமுகமாகும் நண்பர்களோடு உல்லாசமாக இரவுப் பொழுதைக் கழிக்க முயல்கிறார். இருப்பினும் அவரால் அந்த உல்லாசத்திலும் முழுமையாக ஒட்ட முடியவில்லை. விடுதியில் பாடகர் பாடும் ‘Gondola na uta’ (Life is brief) பாடல் வதனாபேவை ஆழ்ந்த சோகத்திற்கு உட்படுத்துகிறது. 

மறுநாள் தன் அலுவலகத்தில் வேலை செய்த உற்சாகமான பெண் வேலையை விட்டு செல்வதாக சொல்கிறார். காரணம் கேட்டதற்கு புதிய வேலையான பொம்மை செய்வதில் ஜப்பானிலுள்ள அனைத்து குழந்தைகளின் தோழியாக உணர்வதாக சொல்கிறாள்.

இந்த காட்சிக்கு பிறகான சில மாதங்களில் வதனாபே இறந்து விடுகிறார். அவரின் இறுதி சடங்கின் பிறகான நினைவாஞ்சலி கூட்டத்தில் வதனாபேவுடனான தங்கள் அனுபவங்களை அவரது நண்பர்களின் பகிர்வுகளாக படம் நகர்த்தப்படுகிறது. பெரும்பாலான நண்பர்கள் வதனாபே தான் உண்டு தன் வேலையுண்டு என அமைதியாக இருப்பவரென சொல்கின்றனர். ஆனால் ஒரு நண்பர் மட்டும் அதைக் கடுமையாக மறுக்கிறார். 

பழுதான விளையாட்டு திடலை மறுசீரமைக்கும் பணியில் தனது இறுதிக் காலங்களில் முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டதை நினைவு கூர்கிறார் நண்பர். அதற்காக பல அரசு அதிகாரிகளிடம் பேச பல மணி நேரங்கள் காத்திருக்கிறார். அவருடைய நடவடிக்கையால் வரும் கேலிகளையும் வசைகளையும் அவர் பொருட்படுத்துவதில்லை. நடவடிக்கை எடுக்கச் சொல்லி கெஞ்சுகிறார். கெஞ்சுவதைப் புரிந்து கொள்ள முடியாதவர்களிடம் கதறி அழுகிறார். உணவு, உடை பற்றிய சிந்தனைகளை மறந்து மறுசீரமைப்பு பணி ஒன்றிலே முழுமூச்சாக இருக்கிறார். 

அவருடைய கடின முயற்சியில் சீரமைக்கபட்ட விளையாட்டு திடலின் ஊஞ்சலில் அமர்ந்து ‘life is brief’ பாடலை வதனாபே பாடும் காட்சியைக் கண்ணீரோடு மட்டுமே காணக் கூடியது. அவரது உடமைகளை தருவதற்காக வீட்டிற்கு வரும் காவலரின் மீள்நினைவில் வருகிறது இக்காட்சி. பனி பொழியும் இரவில் வதனாபே ஊஞ்சலில் அமர்ந்தபடி பாடும் அப்பாடல் தன்னை மிகவும் உலுக்கிவிட்டதையும், அவர் குரலில் வழிந்த சோகத்தை சொல்லும்போது தாள முடியாமல் காவலரே கண் கலங்குகிறார். இனிமேல் தங்கள் பணிகளில் சிறப்பாக செயல்படபோவதாக வதனாபே நண்பர்கள் கையில் மது பாட்டில்களுடன் உறுதியெடுக்கின்றனர். ஆனால் மீண்டும் பழைய மாதிரியான முறையிலேயே பணிகள் செய்வதாக காட்டப்படுவதுடன் படம் முடிகிறது.

குரோசாவாவின் படங்களில் பெண்களின் சித்திரம் மிகவும் வலிமையாக கட்டமைக்கப்பட்டிருக்கும். விளையாட்டு திடல் சீரமைக்க வேண்டியதை முதலில் அவர்கள்தான் உணர்கிறார்கள். அவர்களின் முறையிடல் சரியாக ஏற்கபடாத போது ஏற்படும் அழுகை எனக்கு ஒப்பாரியை ஞாபகப்படுத்துகிறது. விளையாட்டு திடலை நம் உலகத்தின் உவமையாக கொண்டோமென்றால் அது பழுதுப்பட்டிருப்பதை முதலில் பெண்கள்தான் உணர்கிறார்கள். சீரமைப்பு செய்யாவிட்டால் தங்கள் குழந்தைகளுக்கு பாதகம் நேருமே என கலங்குகிறார்கள். ஆண்களோ அதிகார சூழலில் மாட்டிக் கொண்டு சூழ்நிலை கைதிகளாக இருக்கிறார்கள். வதனாபே போல வாழ்க்கையில் விளிம்பில்தான் வாழ்வதின் சாரம் ஆண்களுக்குப் புரிகிறது. வாழ்க்கை என்பது தனக்காக மட்டும் இல்லாமல், சுற்றி இருப்பவர்களும், சூழலும் தரமாக இருப்பதை உறுதி செய்வதில் இருக்கிறது. சூழல் தரமாக இல்லாத பட்சத்தில் அதை மாற்றுவதற்காக போராடுபவர்கள்தான் மனிதர்கள்; வாழ்பவர்கள். குரோசாவா சிறப்பாக இகிருவில் சொல்லும் சேதியும் அதுதான்.

பின்குறிப்பு:

1. இவ்வருடம் குரோசாவாவிற்கு நூற்றாண்டு விழா. (23/3/1910). அவர் படங்களின் மூலம் எனக்களித்த முக்கியமான கணங்களை பத்திரமாக இதயத்தின் ஆழத்தில் அமைதியாக.

2. Life is brief மொழிப்பெயர்க்க முயன்றேன். கண்றாவியாக இருந்தது. ஆதலால் அப்படி ஆங்கிலத்திலேயே தருகிறேன்.

3. சில தரவுகளைச் சரிப் பார்க்க உதவிய விக்கிபீடியாவிற்கு நன்றி.

Life Is Brief

life is brief.
fall in love, maidens
before the crimson bloom
fades from your lips
before the tides of passion
cool within you,
for those of you
who know no tomorrow
life is brief
fall in love, maidens
before his hands
take up his boat
before the flush of his cheeks fades
for those of you
who will never return here
life is brief
fall in love, maidens
before the boat drifts away
on the waves
before the hand resting on your shoulder
becomes frail
for those who will never
be seen here again
life is brief
fall in love, maidens
before the raven tresses begin to fade
before the flame in your hearts
flicker and die
for those to whom today
will never return

(Used as a theme song in Akira Kurosawa's 1952 film Ikiru)

ஓவியம் புரிதல்(பார்க்க,ரசிக்க)


அ.நாகராஜன்

முதலில் கலையையும் இலக்கியத்தையும் ஒரு தளத்தில் வைத்துப் பேசுவது எந்த அளவுக்குசரியாக இருக்கும் என்பதில் நான் இந்த(நவீன) ஓவியம்புரிதல் பற்றி தொடங்குகிறேன்.
இலக்கியம் படைக்க, படிக்க,ரசிக்கக் கல்வி அறிவு அவசியம். ஆனால், இசை , நடனம், ஓவியம்பயிலவோ, அவற்றை அணுகி ரசிக்கவோ கல்வி அறிவு தேவை இல்லை. கலைஞனும்எழுத்தாளனும்படைக்கிறார்கள் என்பதுடன் அவர்கள் தளம் வேறாகி விடுகிறது. இதிலும் நிகழ் கலை என்னும்தலைப்பில் இசையும் நடனமும் என்றாகி விடுவதால் ஓவியம் மட்டும்தான் தனித்து நிற்கிறது, எதிலும்சேராமல் ஒரு பிடிவாதக் குழந்தையைப்போல்.
அடுத்ததாக நான் பேசப் போவது புரிதல் என்பது பற்றி.ஒரு தமிழனுக்கு (இது ஒரு உதாரணம் மட்டுமே) தன் மண்ணின் இசை பற்றியோ, நாட்டியம் பற்றியோ ஒரு தெளிவான புரிதல் உண்டு. அவனுக்கு அதில் போலியையும் உன்னதத்தையும்அடையாளம் காண முடியும். ஆனால் ஓவியம் அதுவும் நவீன ஓவியம் என்றதும் பயந்து, குழம்பி, வெறுத்து விலகுகிறான். தீ.ஜா. வானாலும் நாட்டிய மேதை ருக்மிணி அருண்டேல் அனாலும் இதில் விதிவிலக்கல்ல.
இது ஏன்என்று பர்க்கலாம்.
நமது கலைகள் எல்லாமே எப்போதும் மதம் சார்ந்ததுதான். அவை வளர்ந்ததும் பாதுகாக்கப் பட்டதும் மதங்கள் மூலம்தான். இன்று நாம் கேட்கும் இசையும் நாட்டியமும் ஒருமுழுமையான வளர்ச்சியை 1000வருடங்களுக்கும் முன்பே அடைந்துவிட்டன( நாட்டியம், இசை பற்றி சிலப்பதிகாரத்தில்உள்ளது இன்றும் நடைமுறையில் உள்ளது) இப்போது அவை மாற்றப்படுவதையோ, அவற்றைசிதைப்பதையோ எவரும் ஏற்கமாட்டார். தமக்கு முன்னோர்களிடம் இருந்து வந்ததை தமது அடுத்ததலைமுறைக்கு வடிவம் மாறாமல் கொடுப்பதையே விரும்புவர். எனவே அவை இரண்டையும் அருங்காட்சிப்பொருள்களாகவே நான் காண்கிறேன்
தமிழர் வாழ்க்கையில் ஓவியத்தின் இடம் என்ன என்று பார்த்தால் ஒரு உண்மை தெரியும். அது எப்போதும் மதம் சார்ந்த வரலாறு, அல்லது இதிகாச புராணங்கள் இவற்றை படிப்பறிவு இல்லாதவர்களுக்கு கொண்டு சேர்க்கவே பயன்பட்டிருக்கிறது.இதுசிற்பத்துக்கும் பொருந்தும். இங்கு கலைஞன் யார் என்பதோ அவனது மற்ற விவரங்களோ யாருக்கும் தேவைப்படவில்லை. ஓவியங்களும் கோவிலையும் பூஜை அறையையும் தாண்டி வெளியே வரவில்லை. தத்ரூபம் என்று நாம் இயல்பாக ஓவியம் பற்றிப் பேசும்போது பயன்படுத்தும் வடமொழிச்சொல்லுக்கு இணையான ஒற்றைச்சொல் தமிழில் எனக்குத் தெரியவில்லை. இந்திய ஓவியத்தில் இது என்றும் இருந்ததற்கான அடையாளம்ஏதும் நான் கண்டதில்லை. பண்டைய இலக்கியங்களில் ஓவியம் பற்றிய செய்திகளில் உண்மை ஏதும் புலப்பட வில்லை. நமது ஓவியம் எப்போதும் இரு பரிமாண அணுகுமுறையில்தான் இருந்துவந்து இருக்கிறது. சிற்பத்தில் கிரேக்கப் படையெடுப்புக்குப் பின் இந்திய, கிரேக்க பாணி கலந்து காந்தார பாணி ஒன்றுஉருவாயிற்று.( ஆடைகளில் மடிப்புகள்)
இங்கு கருத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம் இவைஎல்லாம் எப்போது அறிவு ஜீவிகளிடம், அல்லது அரசவைகளில் குடிபுகுந்ததோ அப்போதே அவை தம் யதார்த்த உருவை இழந்துவிட்டன. இன்று அதற்கு உதாரணம் கேரளாவின் கதகளிநடனம்.( தெருக் கூத்துக்கும் இதேகதிதான்) இந்திய சிற்ப,ஓவிய வழியில் எப்போதும் தனி நபர்அடையாளமே இருந்ததில்லை, அண்மைக்காலம் வரை. அஜந்தாஓவியப் பாணி இலங்கையில்சிகிரியா கோட்டையில்காணக்கிடைக்கிறது. அதுவே சித்தன்னவாசலிலும் கிடைக்கிறது. ஓவியம் பயிலும் இன்றைய முறை நம் நிலம் சார்ந்தது அல்ல. ஐரோப்பிய கலாசார பாதிப்பினால் ஆங்கிலேயர் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது நம்மிடம் எந்தமாதிரியான ஓவியம் பயிற்றுவிக்கும் முறை பின்பற்றப் பட்டுவந்தது என்னும் கேள்விக்கு
பதில்இல்லை.நமதுசங்கஇலக்கியங்களில்இருப்பதாகயாரும் கூறுவதில்லை. வட மொழியில் தான் இதற்கு நூல் இருக்கிறது. அதன் ஆங்கில மொழி புத்தகத்தைப் புரட்டினால் அதில் தூரிகை,சித்திரம் தீட்டும் கித்தான் அமைக்கும் முறை, வண்ணங்கள் எந்த மூலப்பொருள்கள் கொண்டுதயாரிக்கவேண்டும், என்பன போன்ற தெளிவான பயில்விக்கும் முறையைக் காணமுடிகிறது. அது போலவேசிற்பக் கலையிலும் பயில்விக்கும் முறை வடமொழியிலேயே உள்ளது. இன்றும் தமிழ்நாட்டில் ஸ்தபதி வழியில் சிலைசெய்பவர்கள் கிரந்த எழுத்தில் இருக்கும் நூலையே பயிலப் பயன்படுத்துகிறனர். ஏன் இவைதமிழில் இல்லை என்பதற்கு விவரம் தெர்ந்தவர்கள்ஆதாரபூர்வமான விளக்கம் அளிக்கவேண்டுகிறேன். இவ்வாறான செய்திகளின் மூலம் நான் இந்த முடிவுக்குத் தள்ளப் படுகிறேன்; அதாவதுதமிழ்நாட்டில் என்றுமே ஓவியத்துக்கு ஒரு பெருந்தன்மையான இடம்இருந்திருக்க வாய்ப்பில்லை; சிற்பம் போல.
இதற்கு நான் முன் வைக்கும் மூன்று காரணங்கள்:
காரணம் 1)
வரலாற்றில்ஓவியத்துக்கு ஒரு தொடர்ச்சியில்லை. சித்தன்னவாசல் பின்புதஞ்சை பெரிய கோவில்சோழர் காலத்து சுவர் ஓவியங்கள், பின்பு விஜயநகர, மராட்டியர் பாதிப்புடன் கூடியஓவியங்கள் என்று பெரும் இடைவெளிகளுடன் ஒன்றுக்கு ஒன்று தொடர்பின்றி உள்ளன. ஆனால் சிறபக்கலையைப்பொறுத்தமட்டில் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்துஅதன் அறுபடாத தொடற்சி பல்லவர்,சோழர்,களப்பிறர், பாண்டியர், நாயக்கர்,என்று எங்கும்கொட்டிக்கிடக்கிறது.
இப்போது ஓவியம்,ஓவியன்,பார்வையாளன் பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாம்.
பொதுவாகவே ஓவியம் வாங்குவது, அதைத் தனது வீட்டில் அலங்காரமாகத் தொங்கவிடுவது போன்ற பழக்கம் நம்மிடம் கிடையாது. பூஜை அறையில் கடவுள் உருவங்களை( அதன் செய் நேர்த்தி பற்றின உணர்வு இல்லாமல், காலாவதியான தினத்தாள் அட்டையில் இருக்கும் படத்துக்காக) சுவர் முழுவதும் நிரப்புவதுதான் எங்கும் கிடைக்கக்கூடிய காட்சி. நாம் ஓவியம் வங்கும் ஜாதி இல்லை. செலவு பண்ணும் காசுக்கு முழுப்பலன் பார்ப்பவர்கள்.
ரூ.1000/-கொடுத்து ஒரு ஓவியம் வாங்குவதைவிடவும் ஒரு புடவை வாங்கி மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் நடுத்தர வர்கம். அவன் வாங்க விரும்பினாலும் அது சாத்தியப் படமுடியாதபடி ஓவியத்துக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்கு ஒன்றை குறிப்பிடவேண்டும். ஓவியம் மூலப்பிரதிதான் விலைப்போகும். அதன் பிரின்ட் வாங்குவது அது கிட்டவில்லை என்பதால்தான்.( ரவி வர்மாவின் ஓவியம் போல) ஓவியத்தின் விலையை வாங்குபவன்தான் தீர்மானிக்கிறான். பணத்தேவைக்குத் தக்கபடி ஓவியன் கொடுக்கிறான். ஆனால் நமது மக்கள் ஓவியத்தின் அளவு, அதன் பொருள் செலவு இவற்றைத்தான் ஓவியத்துக்கு விலை நிர்ணயிக்க அளவுகோலாகப் பயன்படுத்துகிறார்கள்.திறமையின் அடிப்படையில் அல்ல.
நவீன ஓவியன் படைக்கும் ஓவியங்களில் வெற்று உள்ளீடு இருப்பது உண்மைதான்; புதுக்கவிதைகளில் உரைநடையே கவிதையாவதுபோல.ஆனால் ஒரு ஓவியம் முழுமையானதா, வெற்று உள்ளீடு கொண்டதா என்பதை எப்படி முடிவு செய்வது ? அது பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டவன் இனம் பிரித்துக் காண்பான்.
கலை முதலில் அதைப் படைப்பவனுக்காக மட்டுமே. தானும் தனது படைப்பும் மத்திரமே இருக்கும் ஒரு அந்தரங்க நேரத்தில் யாருடைய குறுக்கிடும் நேர்ந்துவிட அவன் ஒப்பமாட்டான். தன்னை மறந்து இசையில் மூழ்கிய பாடகனும், நடனமாடும் நர்த்தகியும், ஓவியனும் ஒரே அனுபவம்தான் பெறுகிறார்கள். அவர்கள் மற்றவரிடமிருந்து தனிப்பட்டு விலகிப் போகிறார்கள். தான் பெற்ற சிசுவை மற்றவர் கண்டு மகிழ்வதைப்போல ஓவியன் தன் ஓவியத்தைப் பிறர் காணவிழைகிறான்.
கலையை ரசிப்பதுடன்(இந்த வடமொழிச்சொல்லுக்கு இணையான ஒற்றைத் தமிழ்ச் சொல் தெரியவில்லை) அதைத் தொடர்ந்து புரிந்துகொள்ள முயல்வதே அவனது அடுத்த முயற்சியாக இருக்கவேண்டும். “வெற்று உள்ளீடு”களை அடையாளம் காணத்தெரிந்தவன் இவை தெரிந்தவனாகவே இருப்பான். நமது கலைகள்(ஓவியம்,சிற்பம், இசை,நாட்டியம்) வெகு காலமாக புழக்கத்தில் இருப்பதால் முழுமையை எட்டிவிட்டன. வடமொழிபோல் அதை நமது கருவூலங்களாகப் பயன்படுவதுதான்சரியாக இருக்கும். இறைவழிபாட்டையும், மதத்தையும் நீக்கிவிட்டால் நமது பாரம்பரியக்கலையே பொருள் அற்றத்தாகிவிடும்.
இன்றைய எதிர்பார்ப்புக்கு ஓவியன் தனது பழைய பாணியை நம்பியிருக்க இயலாது. உலகம் முழுவதுக்கும் கோடும் வண்ணமும் பொது. எனவே ஓவியனை ,அவனது படைப்பை, அவன் சார்ந்த நிலத்துடன் அடையாளப்படுத்த புதிய அளவுகோல் தேவைப்படுகிறது.
காரணம் 2)
தமிழ் முத்தமிழ் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது “ இயல்,இசை,நாட்டியம்” என்பதாக. இதில் சிற்ப-ஓவியக் கலைகளின் இடம் எங்கே ? தமிழில் ஓவியம் பற்றி ஏதேனும் கல்வெட்டு காணப்படுகிறதா ?
சிற்ப ஸாஸ்திரம் வடமொழியில்தான் உள்ளது தமிழில் இல்லை. ஏன்னில்லை என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஏதேனும் ஆதாரபூர்வமான தடையம் காட்டி இதை யாரேனும் பொய்யாக்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
காரணம்3)
ஆனால் வட இந்தியாவில் ஓவியம் பெரும்பாலும் சிறிய அளவில் (miniature format) தயார்செய்த காகிதம் அல்லது கித்தான் ஓலைச்சுவடி களில் தீட்டப்பட்டது. தென் இந்தியாவில் சுவர் ஓவியம் மட்டும்தான். அதுவும் தொடர்பு இல்லாமல்.வட இந்தியாவை எடுத்துக் கொண்டால் கூர்ஜரம் முதல் அஸ்ஸாம் வரை, காஷ்மீரம் முதல் ஹைதிராபாத் வரை சுமார் 10 நூற்றாண்டுகள் வளர்ச்சியும் மாற்றமும் ஓவியத்தில் இழை அறுகாமல் பாதுகாக்கப் பட்டு வருகிறது.( இங்கு மொகலாயப் பேரரசின் பங்கு வெகு முக்கியமானது என்பதை நினைவுகொள்ளவேண்டும்)
தமிழ் நிலத்தில் இம்மாதிரியான எதையும் எடுத்துக்காட்டாகக் கூறமுடிவதில்லை. 18.ஆம் நூற்றாண்டில் ( தோராயமாகத்தான்) மராட்டிய மன்னன் சிவாஜிக்குப் பின் தஞ்சாவூர் ஓவியங்கள் என்று இன்று நாம் குறிப்பிடும் பாணி இங்கு பழக்கத்துக்கு வந்தது. கதா காலட்ஷேப முறைகூட அங்கிருந்துதான் இறக்குமதி.நமது அண்டை மாநிலங்களென்று இன்று அறியப்படும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம்ஆகிய பிரதேசங்களிலும் பெரிய மாறுதல் அல்லது வித்தியாசம் ஏதும் இல்லை.
இப்படியான ஒரு பின்புலத்தில் தமிழனுக்கு ஆங்கிலேய ஆட்சி மூலம் அறிமுகப்படுத்தப் பட்ட ஓவிய முறை எப்போதுமே அன்னியமானதாகவே இருந்து வருகிறது. குழுக் கலையாகப்பயிலப்பட்ட,குடும்பத்தொழிலாகவே பாவிக்கப்படகைவினைக்கலைஞனுக்கும் சிற்ப-ஓவியம் பழகிய கலைஞனுக்கும் இதில் எந்த வேறுபாடும் கிடையாது..குரு- சீட மரபை விட்டு விலகி தனித்து இயங்கும் ஓவியன் தமிழ் மண்ணுக்குப் புதிது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இந்திய ஓவியன் -சிற்பி பெரும் குழப்பத்தில் இருந்து மீளாமுடியாமல் சிக்கித்தவிக்கிறான். ஐரோப்பிய கலைத்தாக்கத்தில் சிக்கி அதையே தனதாகபாவித்து எண்ணம்,செயல் என்று எல்லாமே நகல்செய்து கொண்டிருந்தான். நமது இந்திய கலாசாரம்,மரபு இவையெல்லாம் தன் கலைப் பயணத்தில் ஒரு முதுகு அழுத்தும் சுமை என்று கருதி அவற்றினை விட்டு விலகி தடம் மாறி வழிதப்பிய பயணியாக உணர்கிறான். ஆனால் தான் வாழும் காலத்துப் பதிவுகளை தனது மரபு உத்திகள் மூலம் பதிவுசெய்யமுடியாதவனாக இருக்கிறான்.
என் ஓவிய அனுபவத்தில் ஓவியக் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்(குறிப்பாக இலக்கிய நண்பர்கள் முன்வைக்கும் இரண்டு கேள்விகள்
1. இந்த ஓவியங்கள் ஏன் புரியவில்லை ?
2. இதன்மூலம் ஓவியராகிய நீங்கள் ஒரு உழைப்பாளிக்கு என்ன செய்தி தருகிறீர்கள் ?
3. புரியாத நவீன ஓவியம் எதற்கு ?
முதலாவது கேள்விக்கு பதிலாக நான்கூற விரும்புவது;
ஒரு கலைஞனுக்கு இன்றைய அனுபவத்தை வெளிக்கொணர ஒரு புதிய இலக்கணம் தேவைப்படுகிறது. எப்படி மறபுக்கவிதை என்ற தளத்திலிருந்து நவீன கவிதை என்னும் புதிய தளத்துக்கு குடிபுகுந்தானோ அவ்வாறே குரு -சீடன் வழியிலிருந்து விலகி ஒருபுதிய பாதை அமைக்க முனைகிறான். இசை, நாட்டியத்தில்(இந்திய) இந்த குரு பாரம்பரியம் மிகவும் முக்கியம். குருவைப் பின்பற்றி,அவரைப் பிரதிபலித்து அவருக்கு புகழ் சேர்ப்பதே சீடன் கடமை. குரு மூலமாகத்தான் அவன் அறியப்படுகிறான். ஆனால் இந்த உத்தி ஓவியத்தில் இன்று கைவிடப்பட்ட ஒன்றாகும். சீடன் தன் குருவின் பாணியிலிருந்து விலகி தனதுஎன்ற பாணி ஒன்றை பின்பற்றி, படைக்கவேண்டிய கட்டாயம். எனவே ஒவ்வொரு ஓவியனும் பொது இலக்கணத்திலிருந்து ஒரு புதிய (தன்னுடைய) இலக்கணம் அமைத்துதனதுஅனுபவங்களை கோடுகள்,வண்னங்கள் மூலமாய் வெளிப்படுத்துகிறான். பார்ப்பவனுக்கு அதே அனுபவம் வாய்க்க சாத்தியமில்லை.
ஒரு உதாரணத்தின் மூலமாக இதை பார்க்கலாம்; ஒரு மரத்தை காணும் ஓவியன் அதனால் ஏற்படும் மனபாத்திப்பை ஓவியமாகத் தீட்டும் போது அங்கு மரம் இருக்க வாய்ப்பில்லை மாறாக அதன் தாக்கமே( அதன் பிரம்மாண்டம், திடம் அது தரும் குளுமை போன்ற பல செய்திகளை அவன் அதில் சொல்லக்கூடும். பார்ப்பவன் அதில் தனக்கு முன்பே தெரிந்த மரத்தைக் காணமுயன்று ஏமாற்றமடைகிறான். முன்பே அறிமுகமான ஒலி, காட்சி, இடம்,அனுபவம் இவற்றிலிருந்து விலகி அன்னியமான ஒரு புதிய அனுபவம் யாருக்கும் சங்கடத்தையும் குழப்பத்தையும் நிச்சயம் தரும்தான். இது புதிய மொழி ஒருவனுக்கு தரும் குழப்பம் போன்றதுதான். ஓவியம் தொடர்ந்து பார்த்து பழக்கப்படுவது ஒன்றுதான் இதற்கு வழி. அதுதான் போலியிலிருந்து அசலை அடையாளம் காண உதவும். கவிதை படிக்க,புரிந்து திளைக்க மொழி அறிவு எப்படித் தேவையோ அதுபோல்தான் இங்கும்.
இரண்டாவது வினாவுக்கு நான் தரும் பதில்
கலை உழைப்பாளிக்கு எப்போதுமே எந்தசெய்தியையும் சொன்னதில்லை. அவனுக்கு அது தேவையும் இல்லை. அவனுக்கு இதற்கெல்லாம் நேரமே கிடையாது. அவனுக்கு இதெல்லாம் இடைஞ்சல் தரும் அம்சங்கள். வேலைநேரம் போக ஓய்வு நேரங்களில் மன உல்லாசத்துக்கு மனம்போல பாடியும் ஆடியும் உண்டும் வாழ்பவன் அவன்.
மூன்றாவது கேள்விக்கு என் பதில்;
உலகில் எந்த மாறுதலும் நம்மைக்கேட்டுக்கொண்டு வருவதில்லை. புரியவில்லை என்பதால் நாம் அவற்றையெல்லாம் துறந்துவிடுகிறோமா ? உபயோகிப்பதில்லையா ?எதையும் தீர்மானம் செய்யும் உரிமை நமக்கு உண்டா ? “பழையன கழிதலும்***” இங்கு எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று. ஒன்று மட்டும் நிச்சயம் இசையைக் கேட்டுப் பழகவேணும் ஓவியத்தைப் பார்த்துப் பழகவேணும்.
***
அன்புடன்,
அ.நாகராஜன்
nagarajan62@vsnl.net

ஓவியம் புரிதல்(பார்க்க,ரசிக்க)


அ.நாகராஜன்

முதலில் கலையையும் இலக்கியத்தையும் ஒரு தளத்தில் வைத்துப் பேசுவது எந்த அளவுக்குசரியாக இருக்கும் என்பதில் நான் இந்த(நவீன) ஓவியம்புரிதல் பற்றி தொடங்குகிறேன்.
இலக்கியம் படைக்க, படிக்க,ரசிக்கக் கல்வி அறிவு அவசியம். ஆனால், இசை , நடனம், ஓவியம்பயிலவோ, அவற்றை அணுகி ரசிக்கவோ கல்வி அறிவு தேவை இல்லை. கலைஞனும்எழுத்தாளனும்படைக்கிறார்கள் என்பதுடன் அவர்கள் தளம் வேறாகி விடுகிறது. இதிலும் நிகழ் கலை என்னும்தலைப்பில் இசையும் நடனமும் என்றாகி விடுவதால் ஓவியம் மட்டும்தான் தனித்து நிற்கிறது, எதிலும்சேராமல் ஒரு பிடிவாதக் குழந்தையைப்போல்.
அடுத்ததாக நான் பேசப் போவது புரிதல் என்பது பற்றி.ஒரு தமிழனுக்கு (இது ஒரு உதாரணம் மட்டுமே) தன் மண்ணின் இசை பற்றியோ, நாட்டியம் பற்றியோ ஒரு தெளிவான புரிதல் உண்டு. அவனுக்கு அதில் போலியையும் உன்னதத்தையும்அடையாளம் காண முடியும். ஆனால் ஓவியம் அதுவும் நவீன ஓவியம் என்றதும் பயந்து, குழம்பி, வெறுத்து விலகுகிறான். தீ.ஜா. வானாலும் நாட்டிய மேதை ருக்மிணி அருண்டேல் அனாலும் இதில் விதிவிலக்கல்ல.
இது ஏன்என்று பர்க்கலாம்.
நமது கலைகள் எல்லாமே எப்போதும் மதம் சார்ந்ததுதான். அவை வளர்ந்ததும் பாதுகாக்கப் பட்டதும் மதங்கள் மூலம்தான். இன்று நாம் கேட்கும் இசையும் நாட்டியமும் ஒருமுழுமையான வளர்ச்சியை 1000வருடங்களுக்கும் முன்பே அடைந்துவிட்டன( நாட்டியம், இசை பற்றி சிலப்பதிகாரத்தில்உள்ளது இன்றும் நடைமுறையில் உள்ளது) இப்போது அவை மாற்றப்படுவதையோ, அவற்றைசிதைப்பதையோ எவரும் ஏற்கமாட்டார். தமக்கு முன்னோர்களிடம் இருந்து வந்ததை தமது அடுத்ததலைமுறைக்கு வடிவம் மாறாமல் கொடுப்பதையே விரும்புவர். எனவே அவை இரண்டையும் அருங்காட்சிப்பொருள்களாகவே நான் காண்கிறேன்
தமிழர் வாழ்க்கையில் ஓவியத்தின் இடம் என்ன என்று பார்த்தால் ஒரு உண்மை தெரியும். அது எப்போதும் மதம் சார்ந்த வரலாறு, அல்லது இதிகாச புராணங்கள் இவற்றை படிப்பறிவு இல்லாதவர்களுக்கு கொண்டு சேர்க்கவே பயன்பட்டிருக்கிறது.இதுசிற்பத்துக்கும் பொருந்தும். இங்கு கலைஞன் யார் என்பதோ அவனது மற்ற விவரங்களோ யாருக்கும் தேவைப்படவில்லை. ஓவியங்களும் கோவிலையும் பூஜை அறையையும் தாண்டி வெளியே வரவில்லை. தத்ரூபம் என்று நாம் இயல்பாக ஓவியம் பற்றிப் பேசும்போது பயன்படுத்தும் வடமொழிச்சொல்லுக்கு இணையான ஒற்றைச்சொல் தமிழில் எனக்குத் தெரியவில்லை. இந்திய ஓவியத்தில் இது என்றும் இருந்ததற்கான அடையாளம்ஏதும் நான் கண்டதில்லை. பண்டைய இலக்கியங்களில் ஓவியம் பற்றிய செய்திகளில் உண்மை ஏதும் புலப்பட வில்லை. நமது ஓவியம் எப்போதும் இரு பரிமாண அணுகுமுறையில்தான் இருந்துவந்து இருக்கிறது. சிற்பத்தில் கிரேக்கப் படையெடுப்புக்குப் பின் இந்திய, கிரேக்க பாணி கலந்து காந்தார பாணி ஒன்றுஉருவாயிற்று.( ஆடைகளில் மடிப்புகள்)
இங்கு கருத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம் இவைஎல்லாம் எப்போது அறிவு ஜீவிகளிடம், அல்லது அரசவைகளில் குடிபுகுந்ததோ அப்போதே அவை தம் யதார்த்த உருவை இழந்துவிட்டன. இன்று அதற்கு உதாரணம் கேரளாவின் கதகளிநடனம்.( தெருக் கூத்துக்கும் இதேகதிதான்) இந்திய சிற்ப,ஓவிய வழியில் எப்போதும் தனி நபர்அடையாளமே இருந்ததில்லை, அண்மைக்காலம் வரை. அஜந்தாஓவியப் பாணி இலங்கையில்சிகிரியா கோட்டையில்காணக்கிடைக்கிறது. அதுவே சித்தன்னவாசலிலும் கிடைக்கிறது. ஓவியம் பயிலும் இன்றைய முறை நம் நிலம் சார்ந்தது அல்ல. ஐரோப்பிய கலாசார பாதிப்பினால் ஆங்கிலேயர் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது நம்மிடம் எந்தமாதிரியான ஓவியம் பயிற்றுவிக்கும் முறை பின்பற்றப் பட்டுவந்தது என்னும் கேள்விக்கு
பதில்இல்லை.நமதுசங்கஇலக்கியங்களில்இருப்பதாகயாரும் கூறுவதில்லை. வட மொழியில் தான் இதற்கு நூல் இருக்கிறது. அதன் ஆங்கில மொழி புத்தகத்தைப் புரட்டினால் அதில் தூரிகை,சித்திரம் தீட்டும் கித்தான் அமைக்கும் முறை, வண்ணங்கள் எந்த மூலப்பொருள்கள் கொண்டுதயாரிக்கவேண்டும், என்பன போன்ற தெளிவான பயில்விக்கும் முறையைக் காணமுடிகிறது. அது போலவேசிற்பக் கலையிலும் பயில்விக்கும் முறை வடமொழியிலேயே உள்ளது. இன்றும் தமிழ்நாட்டில் ஸ்தபதி வழியில் சிலைசெய்பவர்கள் கிரந்த எழுத்தில் இருக்கும் நூலையே பயிலப் பயன்படுத்துகிறனர். ஏன் இவைதமிழில் இல்லை என்பதற்கு விவரம் தெர்ந்தவர்கள்ஆதாரபூர்வமான விளக்கம் அளிக்கவேண்டுகிறேன். இவ்வாறான செய்திகளின் மூலம் நான் இந்த முடிவுக்குத் தள்ளப் படுகிறேன்; அதாவதுதமிழ்நாட்டில் என்றுமே ஓவியத்துக்கு ஒரு பெருந்தன்மையான இடம்இருந்திருக்க வாய்ப்பில்லை; சிற்பம் போல.
இதற்கு நான் முன் வைக்கும் மூன்று காரணங்கள்:
காரணம் 1)
வரலாற்றில்ஓவியத்துக்கு ஒரு தொடர்ச்சியில்லை. சித்தன்னவாசல் பின்புதஞ்சை பெரிய கோவில்சோழர் காலத்து சுவர் ஓவியங்கள், பின்பு விஜயநகர, மராட்டியர் பாதிப்புடன் கூடியஓவியங்கள் என்று பெரும் இடைவெளிகளுடன் ஒன்றுக்கு ஒன்று தொடர்பின்றி உள்ளன. ஆனால் சிறபக்கலையைப்பொறுத்தமட்டில் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்துஅதன் அறுபடாத தொடற்சி பல்லவர்,சோழர்,களப்பிறர், பாண்டியர், நாயக்கர்,என்று எங்கும்கொட்டிக்கிடக்கிறது.
இப்போது ஓவியம்,ஓவியன்,பார்வையாளன் பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாம்.
பொதுவாகவே ஓவியம் வாங்குவது, அதைத் தனது வீட்டில் அலங்காரமாகத் தொங்கவிடுவது போன்ற பழக்கம் நம்மிடம் கிடையாது. பூஜை அறையில் கடவுள் உருவங்களை( அதன் செய் நேர்த்தி பற்றின உணர்வு இல்லாமல், காலாவதியான தினத்தாள் அட்டையில் இருக்கும் படத்துக்காக) சுவர் முழுவதும் நிரப்புவதுதான் எங்கும் கிடைக்கக்கூடிய காட்சி. நாம் ஓவியம் வங்கும் ஜாதி இல்லை. செலவு பண்ணும் காசுக்கு முழுப்பலன் பார்ப்பவர்கள்.
ரூ.1000/-கொடுத்து ஒரு ஓவியம் வாங்குவதைவிடவும் ஒரு புடவை வாங்கி மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் நடுத்தர வர்கம். அவன் வாங்க விரும்பினாலும் அது சாத்தியப் படமுடியாதபடி ஓவியத்துக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்கு ஒன்றை குறிப்பிடவேண்டும். ஓவியம் மூலப்பிரதிதான் விலைப்போகும். அதன் பிரின்ட் வாங்குவது அது கிட்டவில்லை என்பதால்தான்.( ரவி வர்மாவின் ஓவியம் போல) ஓவியத்தின் விலையை வாங்குபவன்தான் தீர்மானிக்கிறான். பணத்தேவைக்குத் தக்கபடி ஓவியன் கொடுக்கிறான். ஆனால் நமது மக்கள் ஓவியத்தின் அளவு, அதன் பொருள் செலவு இவற்றைத்தான் ஓவியத்துக்கு விலை நிர்ணயிக்க அளவுகோலாகப் பயன்படுத்துகிறார்கள்.திறமையின் அடிப்படையில் அல்ல.
நவீன ஓவியன் படைக்கும் ஓவியங்களில் வெற்று உள்ளீடு இருப்பது உண்மைதான்; புதுக்கவிதைகளில் உரைநடையே கவிதையாவதுபோல.ஆனால் ஒரு ஓவியம் முழுமையானதா, வெற்று உள்ளீடு கொண்டதா என்பதை எப்படி முடிவு செய்வது ? அது பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டவன் இனம் பிரித்துக் காண்பான்.
கலை முதலில் அதைப் படைப்பவனுக்காக மட்டுமே. தானும் தனது படைப்பும் மத்திரமே இருக்கும் ஒரு அந்தரங்க நேரத்தில் யாருடைய குறுக்கிடும் நேர்ந்துவிட அவன் ஒப்பமாட்டான். தன்னை மறந்து இசையில் மூழ்கிய பாடகனும், நடனமாடும் நர்த்தகியும், ஓவியனும் ஒரே அனுபவம்தான் பெறுகிறார்கள். அவர்கள் மற்றவரிடமிருந்து தனிப்பட்டு விலகிப் போகிறார்கள். தான் பெற்ற சிசுவை மற்றவர் கண்டு மகிழ்வதைப்போல ஓவியன் தன் ஓவியத்தைப் பிறர் காணவிழைகிறான்.
கலையை ரசிப்பதுடன்(இந்த வடமொழிச்சொல்லுக்கு இணையான ஒற்றைத் தமிழ்ச் சொல் தெரியவில்லை) அதைத் தொடர்ந்து புரிந்துகொள்ள முயல்வதே அவனது அடுத்த முயற்சியாக இருக்கவேண்டும். “வெற்று உள்ளீடு”களை அடையாளம் காணத்தெரிந்தவன் இவை தெரிந்தவனாகவே இருப்பான். நமது கலைகள்(ஓவியம்,சிற்பம், இசை,நாட்டியம்) வெகு காலமாக புழக்கத்தில் இருப்பதால் முழுமையை எட்டிவிட்டன. வடமொழிபோல் அதை நமது கருவூலங்களாகப் பயன்படுவதுதான்சரியாக இருக்கும். இறைவழிபாட்டையும், மதத்தையும் நீக்கிவிட்டால் நமது பாரம்பரியக்கலையே பொருள் அற்றத்தாகிவிடும்.
இன்றைய எதிர்பார்ப்புக்கு ஓவியன் தனது பழைய பாணியை நம்பியிருக்க இயலாது. உலகம் முழுவதுக்கும் கோடும் வண்ணமும் பொது. எனவே ஓவியனை ,அவனது படைப்பை, அவன் சார்ந்த நிலத்துடன் அடையாளப்படுத்த புதிய அளவுகோல் தேவைப்படுகிறது.
காரணம் 2)
தமிழ் முத்தமிழ் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது “ இயல்,இசை,நாட்டியம்” என்பதாக. இதில் சிற்ப-ஓவியக் கலைகளின் இடம் எங்கே ? தமிழில் ஓவியம் பற்றி ஏதேனும் கல்வெட்டு காணப்படுகிறதா ?
சிற்ப ஸாஸ்திரம் வடமொழியில்தான் உள்ளது தமிழில் இல்லை. ஏன்னில்லை என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஏதேனும் ஆதாரபூர்வமான தடையம் காட்டி இதை யாரேனும் பொய்யாக்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
காரணம்3)
ஆனால் வட இந்தியாவில் ஓவியம் பெரும்பாலும் சிறிய அளவில் (miniature format) தயார்செய்த காகிதம் அல்லது கித்தான் ஓலைச்சுவடி களில் தீட்டப்பட்டது. தென் இந்தியாவில் சுவர் ஓவியம் மட்டும்தான். அதுவும் தொடர்பு இல்லாமல்.வட இந்தியாவை எடுத்துக் கொண்டால் கூர்ஜரம் முதல் அஸ்ஸாம் வரை, காஷ்மீரம் முதல் ஹைதிராபாத் வரை சுமார் 10 நூற்றாண்டுகள் வளர்ச்சியும் மாற்றமும் ஓவியத்தில் இழை அறுகாமல் பாதுகாக்கப் பட்டு வருகிறது.( இங்கு மொகலாயப் பேரரசின் பங்கு வெகு முக்கியமானது என்பதை நினைவுகொள்ளவேண்டும்)
தமிழ் நிலத்தில் இம்மாதிரியான எதையும் எடுத்துக்காட்டாகக் கூறமுடிவதில்லை. 18.ஆம் நூற்றாண்டில் ( தோராயமாகத்தான்) மராட்டிய மன்னன் சிவாஜிக்குப் பின் தஞ்சாவூர் ஓவியங்கள் என்று இன்று நாம் குறிப்பிடும் பாணி இங்கு பழக்கத்துக்கு வந்தது. கதா காலட்ஷேப முறைகூட அங்கிருந்துதான் இறக்குமதி.நமது அண்டை மாநிலங்களென்று இன்று அறியப்படும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம்ஆகிய பிரதேசங்களிலும் பெரிய மாறுதல் அல்லது வித்தியாசம் ஏதும் இல்லை.
இப்படியான ஒரு பின்புலத்தில் தமிழனுக்கு ஆங்கிலேய ஆட்சி மூலம் அறிமுகப்படுத்தப் பட்ட ஓவிய முறை எப்போதுமே அன்னியமானதாகவே இருந்து வருகிறது. குழுக் கலையாகப்பயிலப்பட்ட,குடும்பத்தொழிலாகவே பாவிக்கப்படகைவினைக்கலைஞனுக்கும் சிற்ப-ஓவியம் பழகிய கலைஞனுக்கும் இதில் எந்த வேறுபாடும் கிடையாது..குரு- சீட மரபை விட்டு விலகி தனித்து இயங்கும் ஓவியன் தமிழ் மண்ணுக்குப் புதிது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இந்திய ஓவியன் -சிற்பி பெரும் குழப்பத்தில் இருந்து மீளாமுடியாமல் சிக்கித்தவிக்கிறான். ஐரோப்பிய கலைத்தாக்கத்தில் சிக்கி அதையே தனதாகபாவித்து எண்ணம்,செயல் என்று எல்லாமே நகல்செய்து கொண்டிருந்தான். நமது இந்திய கலாசாரம்,மரபு இவையெல்லாம் தன் கலைப் பயணத்தில் ஒரு முதுகு அழுத்தும் சுமை என்று கருதி அவற்றினை விட்டு விலகி தடம் மாறி வழிதப்பிய பயணியாக உணர்கிறான். ஆனால் தான் வாழும் காலத்துப் பதிவுகளை தனது மரபு உத்திகள் மூலம் பதிவுசெய்யமுடியாதவனாக இருக்கிறான்.
என் ஓவிய அனுபவத்தில் ஓவியக் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்(குறிப்பாக இலக்கிய நண்பர்கள் முன்வைக்கும் இரண்டு கேள்விகள்
1. இந்த ஓவியங்கள் ஏன் புரியவில்லை ?
2. இதன்மூலம் ஓவியராகிய நீங்கள் ஒரு உழைப்பாளிக்கு என்ன செய்தி தருகிறீர்கள் ?
3. புரியாத நவீன ஓவியம் எதற்கு ?
முதலாவது கேள்விக்கு பதிலாக நான்கூற விரும்புவது;
ஒரு கலைஞனுக்கு இன்றைய அனுபவத்தை வெளிக்கொணர ஒரு புதிய இலக்கணம் தேவைப்படுகிறது. எப்படி மறபுக்கவிதை என்ற தளத்திலிருந்து நவீன கவிதை என்னும் புதிய தளத்துக்கு குடிபுகுந்தானோ அவ்வாறே குரு -சீடன் வழியிலிருந்து விலகி ஒருபுதிய பாதை அமைக்க முனைகிறான். இசை, நாட்டியத்தில்(இந்திய) இந்த குரு பாரம்பரியம் மிகவும் முக்கியம். குருவைப் பின்பற்றி,அவரைப் பிரதிபலித்து அவருக்கு புகழ் சேர்ப்பதே சீடன் கடமை. குரு மூலமாகத்தான் அவன் அறியப்படுகிறான். ஆனால் இந்த உத்தி ஓவியத்தில் இன்று கைவிடப்பட்ட ஒன்றாகும். சீடன் தன் குருவின் பாணியிலிருந்து விலகி தனதுஎன்ற பாணி ஒன்றை பின்பற்றி, படைக்கவேண்டிய கட்டாயம். எனவே ஒவ்வொரு ஓவியனும் பொது இலக்கணத்திலிருந்து ஒரு புதிய (தன்னுடைய) இலக்கணம் அமைத்துதனதுஅனுபவங்களை கோடுகள்,வண்னங்கள் மூலமாய் வெளிப்படுத்துகிறான். பார்ப்பவனுக்கு அதே அனுபவம் வாய்க்க சாத்தியமில்லை.
ஒரு உதாரணத்தின் மூலமாக இதை பார்க்கலாம்; ஒரு மரத்தை காணும் ஓவியன் அதனால் ஏற்படும் மனபாத்திப்பை ஓவியமாகத் தீட்டும் போது அங்கு மரம் இருக்க வாய்ப்பில்லை மாறாக அதன் தாக்கமே( அதன் பிரம்மாண்டம், திடம் அது தரும் குளுமை போன்ற பல செய்திகளை அவன் அதில் சொல்லக்கூடும். பார்ப்பவன் அதில் தனக்கு முன்பே தெரிந்த மரத்தைக் காணமுயன்று ஏமாற்றமடைகிறான். முன்பே அறிமுகமான ஒலி, காட்சி, இடம்,அனுபவம் இவற்றிலிருந்து விலகி அன்னியமான ஒரு புதிய அனுபவம் யாருக்கும் சங்கடத்தையும் குழப்பத்தையும் நிச்சயம் தரும்தான். இது புதிய மொழி ஒருவனுக்கு தரும் குழப்பம் போன்றதுதான். ஓவியம் தொடர்ந்து பார்த்து பழக்கப்படுவது ஒன்றுதான் இதற்கு வழி. அதுதான் போலியிலிருந்து அசலை அடையாளம் காண உதவும். கவிதை படிக்க,புரிந்து திளைக்க மொழி அறிவு எப்படித் தேவையோ அதுபோல்தான் இங்கும்.
இரண்டாவது வினாவுக்கு நான் தரும் பதில்
கலை உழைப்பாளிக்கு எப்போதுமே எந்தசெய்தியையும் சொன்னதில்லை. அவனுக்கு அது தேவையும் இல்லை. அவனுக்கு இதற்கெல்லாம் நேரமே கிடையாது. அவனுக்கு இதெல்லாம் இடைஞ்சல் தரும் அம்சங்கள். வேலைநேரம் போக ஓய்வு நேரங்களில் மன உல்லாசத்துக்கு மனம்போல பாடியும் ஆடியும் உண்டும் வாழ்பவன் அவன்.
மூன்றாவது கேள்விக்கு என் பதில்;
உலகில் எந்த மாறுதலும் நம்மைக்கேட்டுக்கொண்டு வருவதில்லை. புரியவில்லை என்பதால் நாம் அவற்றையெல்லாம் துறந்துவிடுகிறோமா ? உபயோகிப்பதில்லையா ?எதையும் தீர்மானம் செய்யும் உரிமை நமக்கு உண்டா ? “பழையன கழிதலும்***” இங்கு எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று. ஒன்று மட்டும் நிச்சயம் இசையைக் கேட்டுப் பழகவேணும் ஓவியத்தைப் பார்த்துப் பழகவேணும்.
***
அன்புடன்,
அ.நாகராஜன்
nagarajan62@vsnl.net

பொன் மொழிகள் சில..........

நான் அனைத்தையும் நேசிக்கிறேன். அதனால்தான் என்னால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது - டால்ஸ்டாய்

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -ஜேம்ஸ் ஆலன்.

மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன. -நபிகள் நாயகம்.

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம். -அன்னை தெரசா.

இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பிரம்மச்சாரியம் அவசியம். ஏனெனில் உடல் மீதான ஆசை ஒழிந்தாலன்றி ஆத்மானந்தம் கிடையாது. -ஸ்ரீசாரதாதேவி.

ஐம்பொறிகள் அடக்கி வாழும் பெரியோரிடம் இறைவன் உறவு கொண்டாடுவான். -வள்ளலார்

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -ஜெபர்சன்.

நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது - கன்ஃபூஷியஸ்

சுடுகாட்டிற்கு அப்பாலும் நம்மை தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கம் மட்டுமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிவன.
 -வள்ளலார்

Thursday, December 22, 2011

சேகர்கபூரின் இந்திய காமிக்ஸ்.

இரும்புக்கை மாயாவி, வேதாளம்,டின்டின், என்று காமிக்ஸ் புத்தகங்களை தேடித் தேடி படித்தவன் நான். இன்றைக்கும் அந்த ஆர்வம் குறையவேயில்லை.


சென்னை புத்தக கண்காட்சியில் ஐம்பதுக்கும் அதிகமான தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வந்து இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறேன்.


சில மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக சாது என்ற புதிய காமிக்ஸ் புத்தகத்தை லேண்ட்மார்க்கில்  வாங்கி வந்தேன். மிகசிறப்பாக இருந்தது.  யார் இதை உருவாக்குகிறார்கள் என்று தேடிப் படித்த போது  பிரபல திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் தான் இந்த காமிக்ஸ் புத்தகங்களை வெளியிடுகிறார். அவரே சில காமிக்ஸ் புத்தகங்களின் கதைகளை எழுதியிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன்.


அவரோடு ரிச்சர்டு பிரான்சன், எழுத்தாளர் தீபக் சோப்ரா  இணைந்து வர்ஜின் காமிக்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி புதிது புதிதாக காமிக்ஸ் புத்தகங்களை கொண்டு வருகிறார்கள் .


32 பக்கங்கள் முழுமையான வண்ணப்படங்களுடன் வெளியாகிறது வர்ஜின் காமிக்ஸ். இதில் பல்வேறு கதைவரிசைகள் உள்ளன. குறிப்பாக தேவி, சாது, ராமாயண்3392, கல்கி, புத்தா, சிவா, நாகப்பெண், பஞ்ச தந்திரா என்று இருபதிற்கும் மேற்பட்ட கதைவரிசைகள் வெளியாகின்றன.


சேகர் கபூர் எலிசபெத் திரைப்படத்தின் மூலம் உலகின் கவனத்தை பெற்றவர். எட்டு ஆஸ்கார் விருதிற்கு பரிந்து செய்யப்பட்டது எலிசபெத். முன்னதாக அவர் இயக்கிய பேண்டிட் குயின் பூலான் தேவியின் வாழ்க்கையை மையமாக கொண்டது. உலகப்படவிழாக்களில் விருதுகளையும் சிறந்த பாராட்டையும் பெற்றது. நெல்சன் மண்டேலா பற்றிய படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறார் சேகர்கபூர் என்றொரு செய்தியும் வாசித்திருக்கிறேன்.


அவரும் சிறுவயதில் இருந்து அமர்சித்ர கதா, காமிக்ஸ் புத்தங்களின் மீது தீராத விருப்பம் கொண்டிருக்கிறார் என்பதை அவரது குறிப்புகளில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது. பரபரப்பான தனது திரைப்பட வேலைகளுக்கு நடுவில் இது போன்று காமிக்ஸ் கதைகளுக்கு கவனம் செலுத்த முடிவது வரவேற்க படவேண்டிய முயற்சி.


சென்ற ஆண்டு தமிழ்காமிக்ஸ் வாசகர்கள் அமைப்பு ஒன்றினை உருவாக்கி அதற்கான சிறப்பு கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள என்னை நடிகர் பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் அழைத்திருந்தார்கள். அதில் ஒவியர் டிராஸ்கி மருது ,இயக்குனர் மிஷ்கினும் கலந்து கொண்டார்கள். மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நண்பர்களை சந்திக்க முடிந்தது. அதில் கிடைத்த சில காமிக்ஸ் நண்பர்களின் நட்பு இப்போதும் தொடர்கிறது.


வர்ஜின் காமிக்ஸ் சம்பிரதாயமான காமிக்ஸ் வடிவத்திலிருந்து பெரிதும் மாறுபட்டது. சமீபமாக ஜப்பானில் வெளியாகி வரும் மாங்கா போன்ற காமிக்ஸ் வடிவங்களுக்கு நிகரானது. இந்த வரிசை காமிக்ஸ் புத்தங்களின் தனிச்சிறப்பு அதற்கு வரையப்படும் ஒவியங்களும் அதன் சட்டகமும் . இந்த இரண்டும் சேகர் கபூரின் காமிக்ஸ் வரிசையில் தனித்துவமாக உள்ளது. குறிப்பாக வண்ணங்களை பயன்படுத்தும் விதமும் கதாபாத்திரங்களின் தோற்றங்களில் காணப்படும் உணர்ச்சி வெளிப்பாடும் அற்புதமானது.


இந்திய புராணங்களை முற்றிலும் புதிய கதைசொல்லும் முறையின் வழியே நவீன காமிக்ஸ் புத்தகங்களாக உருவாக்குவதே இவர்களின் பிரதான நோக்கம். அந்த வகையில் ராமாயணத்தை எதிர்காலத்தில் நடைபெறும் விஞ்ஞானபுனைகதை போல ராமாயண் 3392 என்று மறுகதை சொல்லல் வழியே புத்துருவாக்கம் செய்திருக்கிறார்கள். ராமனின் தோற்றமும் கதை நிகழும் களமும் வியப்பூட்டுகின்றன. நாம் அறிந்த ராமாயணக்கதையை இத்தனை நவீனமாக மாற்றமுடிகிறது என்பது ஆச்சரியமூட்டுகிறது.


அது போலவே முதல் இந்திய சுதந்திர போரின் பின்புலத்தில் நடைபெறும் சாது என்ற காமிக்ஸ் வரிசை. .இந்திய பெண்கடவுளான தேவியை மையமாக கொண்டு புதிய கதைகளத்தில் நடைபெறும் சாகசங்களான காமிக்ஸ், பாம்புப் பெண் என்ற நாகதேவதையை பற்றிய காமிக்ஸ் , சிவா என்று புராணகால சிவனின் சக்திகளை கொண்ட அதி நவீன கதாபாத்திரம் என்று வர்ஜின் காமிக்ஸ் இந்திய கதை சொல்லும் முறைக்கு புதிய சாளரத்தை திறந்து வைத்திருக்கிறது.


2008 ல் இருந்து வெளியாகும் இந்த காமிக்ஸின் விலை ஐம்பது முதல் நூற்றிஇருபத்தைந்து வரை உள்ளது.



ஹாலிவுட்டின் அதிரடி ஆக்சன் படங்களை இயக்கிய ஜான் ஹø சேகர் கபூருக்காக ஒரு காமிக்ஸ் புத்தகம் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார். இது போலவே ஹாலிவுட் நடிகரான நிகோலஸ் கேஜ் சாது என்ற காமிக்ஸ் கதாபாத்திரத்திற்கு உருமாதிரியாக தோற்றம் தருகிறார்



பேட் மேன் சூப்பர்மேன் ஸ்பைடர் மேன்களுக்கு போட்டியாக இந்திய சாகச கதாபாத்திரங்களை உருவாக்கிவரும் சேகர்கபூருக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது சோனி நிறுவனம் அவருடன் இணைந்து இந்த காமிக்ஸ் கதையை வீடியோ விளையாட்டாக  மாற்றுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதுபோலவே ராமாயன் 3392 கதையை படமாக்கவும் ஹாலிவுட்டில் கையெப்பம் ஆகியுள்ளது.



புத்தரின் வாழ்க்கை வரலாற்றை காமிக்ஸ் புத்தகமாக வெளியிடுகிறது வர்ஜின் நிறுவனம். தீபக் சோப்ரா இதை எழுதியிருக்கிறார். இது போலவே உலகம் அழியப்போகும் மகாபிரளயத்தை பின்புலமாக கொண்டு காமிக்ஸ் புத்தகம் உருவாக்கபட்டு வருகிறது.



வர்ஜின் காமிக்ஸ் தற்போது லிக்யூட் காமிக்ஸ் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அதன் நிர்வாக அமைப்பும் விநியோகமும் மாற்றம் செய்யபட்டிருக்கிறது. ஆகவே எல்லா காமிக்ஸ் புத்தகங்களும் சென்னையில் கிடைப்பதில்லை.


ஆனால் பெங்களுரிலும் மும்பையிலும் இவை எளிதாக கிடைக்கின்றன. ஆன்லைனில் கிடைப்பதாக சில நண்பர்கள் தெரிவித்தனர்.


இந்தியாவிலிருந்து உருவாகி வரும் காமிக்ஸ் புத்தங்களில் தனித்து குறிப்பிடப்பட வேண்டியது சேகர் கபூரின் இந்த காமிக்ஸ் வரிசை. தமிழில் புதிதாக காமிக்ஸ் உருவாக்க நினைப்பவர்களுக்கான முன்மாதிரியாக இதை கொள்ளலாம்.


தமிழில் உள்ள மயில்ராவணன் கதை மற்றும் அல்லி ராஜ்ஜியம், பரமார்த்த குருவும்சீடர்களும்,  பட்டி விக்ரமாதித்யன் கதைகள் போன்றவை காமிக்ஸ் புத்தகங்களாக மாற்றுவதற்கு எளிதான கதைகள். வியப்பூட்டும் தனியான புனைவுலகம் கொண்டவை.


இந்தியா ஆதிநாட்களில் இருந்தே கதை சொல்வதில் முன்னோடியான நாடு. நம்மிடமிருந்தே கதை சொல்லும் கலை பலநாடுகளுக்கு சென்றிருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து பஞ்சதந்திர கதைகள் பலநாடுகளுக்கு பயணம் செய்திருக்கின்றன. பஞ்சதந்திர கதைகளின் மூலத்தை ஆராயும் போது அந்த கதைகளின் அதே மாதிரியை கொண்ட கதைகளாக பெர்சியாவில் காணமுடிகிறது. பஞ்ச தந்திரம் நான்காம் நூற்றாண்ட்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சரித்திர ஆசிரியர்கள் வகைப்படுத்துகிறார்கள்.


 யாத்ரீகர்களின் வழியே இந்த கதைகள் தேசம் விட்டு தேசம் கடந்து சென்றிருக்கின்றன. பத்தாம் நூற்றாண்டில் பஞ்ச தந்திர கதைகள் பெர்சியாவில் வெளியாகி உள்ளது. அங்கிருந்து கிரிஸ் ஸ்பெயின், மற்றும் ஐரோப்பிய நாடுகளுக் சென்று வெவ்வேறு வடிவம் கொண்டிருக்கின்றன. சில கதைகள் சற்றே மாற்றத்துடன் வெளிநாட்டு பயணிகளின் வழியே இந்தியாவிற்கு திரும்பி வந்திருக்கின்றன



இப்படி கதைகளின் தொடர்ச்சியான பயணம் நம் காலத்தில் தான் தேங்கி போய்விட்டது. இந்திய மரபுகதை சொல்லும் முறைகள் பெரிதும் கைவிடப்பட்டுவிட்டன.


ஒருவகையில் இது போன்ற காமிக்ஸ் முயற்சிகள் அதை மீள்உருவாக்கம் செய்கின்றன. காமிக்ஸ் குழந்தைகளுக்கு மட்டுமானது என்ற தவறான எண்ணம் பலரிடமும் உள்ளது. உண்மையில் காமிக்ஸ் வயது வரம்பற்றது. காமிக்ûஸ வாசிக்கும் போது வாசகன் தன் குழந்தை பருவத்தின் குதூகலத்திற்கு வியப்பிற்கு உள்ளாகிறான் என்பதே நிஜம்.


***

பாண்டிட் க்வீன் [Bandit Queen ]


"Animals, drums, illiterates, low castes and women are worthy of being beaten"- Manusmriti 
படத்தில் கையாளப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்துக்கு முன்னோட்டமாக: -  
’’ மிருகங்கள், மேளங்கள், கல்லாதோர்,  தாழ்த்தப்பட்ட சாதியினர்,  மற்றும் பெண்கள் அடிவாங்கவே படைக்கப்பட்டவர்கள்” - மனுஸ்மிருதி. என்னும் அதிர்ச்சியளிக்கும் வாக்கியத்துடன் இப்படம் துவங்குகிறது.

பாண்டிட் க்வீன்:-  சமகாலத்தில் இந்தியாவில் எடுக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த திரைப்படம், இந்திய கிராமங்களில் இன்றும் நிலவும் சாதிக் கொடுமைகளை இந்த அளவுக்கு பட்ட வர்த்தனமாக எந்தப்படமுமே  சொன்னதில்லை, சேகர் கபூரின்  ஆகச் சிறந்த உலகத்தரமான இயக்கமும் , நஷ்ரத் ஃபதே அலிகான் அவர்களின் இசையும், கணீர் குரலில் அமைந்த ஆலாபனைகளும் படத்தின் பெரும் பலம் ஆகும், ஒரு சாராரின் நன்மைக்கான வியாபார ரீதியான படம் என்னும் அவப்பெயரை  அது துடைத்து சர்வதேச  தரத்தையும் வழங்கிய இசைக்கோர்வை ,அஷோக் மேத்தாவின் அபாரமான ஒளிப்பதிவில் ஒவ்வொரு ஃப்ரேமிலுமே தேர்ந்த கலைத்திறன் மிளிர்வதைக் நாம் காணலாம் . ரேணு சலூஜாவின் நேர்த்தியான எடிட்டிங் கனகச்சிதமானது கூட அது சொல்லவந்ததை மிகுந்த தாக்கத்துடன் நச்சென சொல்லிச் செல்லும். பூலான் தேவியை வெறும் கொள்ளைக்காரியாக கொலைகாரியாக மட்டுமே அறிந்திருந்த இந்தியாவின் இன்னொரு பகுதிக்கு அவர் எதனால் துப்பாக்கியை கையில் எடுத்தார்? வட இந்தியாவில் சாதிவெறி எப்படி தலைவிரித்து ஆடுகிறது என்று ஆணித்தரமாக உரைத்த படம். இது எப்படி சென்சாரிலிருந்து வெட்டுப்படாமல் வெளியே வந்தது? என்று பலருக்கு ஆச்சர்யமாகக்கூட இருந்திருக்கும். கடந்த 14 ஆண்டுகளில் இது போல வேறேந்த உண்மைக் கதையுமே இந்த அளவுக்கு படமாக்கப்படவுமில்லை தாக்கத்தை உண்டு பண்ணவுமில்லை என்பேன். இந்தப்படம் உருவாகையில் பூலான் தேவி ஒரு மாநிலங்களவை உறுப்பினர், அவரை சேகர் கபூர் க்டைசி வரை சந்திக்கவேயில்லை, ஒருவேளை அவரை சந்திக்க வேண்டிவந்தால் தான் படைத்து வைத்திருக்கும் பூலான் தேவி தரும் தாக்கத்தின் அளவு குறைந்து விடுமோ?!!! என்றே அதை அவர் தவிர்த்தார்.

இயக்குனர் சேகர் கபூர்
விர வன்-புணர்வு காட்சிகள் படத்தில் மிகவும் அதிகம் வைத்து , இந்தியாவின் கருப்பான பக்கத்தை ப்ரிட்டிஷாரின் தயாரிப்பின் மூலம் உலகுக்கே கூட்டிக் கொடுத்தார் என்னும் குற்றச்சாட்டும் இவர் மீது உள்ளது. இந்தியாவில் கோர தாண்டவமாடும் சாதிப் பேயை தோலுரித்துக் காட்டக்கூட ஒரு அந்நிய தயாரிப்பு நிறுவனம் தானே வர வேண்டியிருக்கிறது? அதை நாமே தயாரித்திருக்க வேண்டாமா ?!!! குற்றம் சாட்டுபவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கட்டும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு சாதி வெறியன் திருந்தினாலுமே  ஒரு படைப்பாளியாக அது சேகர் கபூருக்கு கிடைத்த பெரும் வெற்றி என்பேன். இப்படம் மூலம் சீமா பிஸ்வாஸ் என்னும் ஆகச்சிறந்த நடிகை இந்திய திரை உலகுக்கு கிடைத்தார். என்னே இவர் பங்கு? ,தன் வாழ்நாள் சாதனையாக சொல்லிக்கொள்ள ஒரு படம் போதும். நிஜ பூலான் தேவியே இவரது நடிப்பை   பார்த்துவிட்டு என்னையே இவரில் நான் பார்த்தேன் என விக்கித்துப் போனாராம்.  மேலும் படத்தைப் பார்த்த பூலான் தேவி சொன்னது படத்தில் காட்டியது கொஞ்சம் தான் , நடந்ததை என்னால் விவரிக்கக் கூட முடியாது, அப்படி ஒரு பயங்கர நினைவலைகளை மீண்டும் என்னுள் தோற்றுவிக்கும் என்றார்.  இது போன்ற படைப்புகளை தருவதற்கும் பார்ப்பதறகுமே அபாரமான நெஞ்சுரம் வேண்டும். நல்ல புரிதலுள்ளவர்கள் எக்காலத்திலும் பார்த்து பிறருக்கும் பரிந்துரைத்து சாதி பேதம் களைய உதவி செய்ய ஏற்ற ஒரு படம்.

படத்தின் கதை:-
பூலான்  உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற மிகவும் பிந்தங்கிய கிராமத்தில் பிறந்தார். அங்கே உயர் சாதி சத்ரியர்களான தாகூர்களின் ஆதிக்கம் மிகவும் அதிகம். அவர்கள் வைத்தது தான் சட்டம். அங்கே காவல் நிலையம் இருந்தாலும், அங்கே அநேக போலீஸ்காரர்கள் தாகூர்களாகவோ அல்லது ஏனைய உயர் சாதி பிராமணர்களாகவோ இருக்கின்றனர். ஆகவே அங்கே தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் வேதனைகளைச் சொல்லி மாளாது. அதே ஊரில் படகு ஓட்டும் தொழில் செய்யும்  மல்லா எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் பூலான். அவரின் 11 வயதில் படம் துவங்குகிறது .  தந்தை தேவிதீன் [ராம் சரண்] பரம்பரை பரம்பரையாய் பெண்ணடிமைத்தனத்தை ஆதரிக்கும் சராசரி ஆண்களின் மனநிலையை கொண்டிருக்கும் அப்பா.  தாயார்  மூலா , இவர்களுக்கு பிறந்தது நான்கு பெண்களாதலால் சொற்ப வருமானத்தில் எப்படி நால்வரையும் வரதட்சனை கொடுத்து கரை சேர்க்கப்போகிறோம் என்று வாடி வதங்கும் ஒரு சராசரி அம்மா. 

பூலானுக்கு ஒரு மூத்த சகோதரியும் மூன்று இளைய சகோதரியும். ஒரு தம்பியும் உண்டு. அவர்களது கிராமத்தில் பால்ய விவாகம் என்பது அங்கு மிக்ச் சாதாரணம் . பூலானுக்கு அவள் பூப்படையும் முன்பே  திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால்[ஆதித்யா ஸ்ரீவத்சவா]. பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். அக்கிராமத்தில் திருமணம் ஆன சிறுமி பூப்படையும்  வரை பெற்றோரது வீட்டிலேயே இருப்பது வழக்கம்.

தன்படி  முதலில் பூலான்  தாய் வீட்டில் இருந்தவளை புட்டிலால் வலுக்கட்டாயமாக வந்து எனக்கு சீதனமாக தந்த சைக்கிள் துருபிடிக்கிறது, எனக்கு சீதனமாக கொடுக்கப்பட்ட பசு மடி வற்றிப்போய்விட்டது, எனக்கு ஒன்றும் பெண் கிடைக்காமலில்லை. பூலானை அனுப்பமுடியுமா? முடியாதா? என்று மிரட்டி, அவளை தன்னுடன் படகில் கூட்டிச்செல்கிறான், சிறுமி பூலான் செய்வதறியாது திகைத்து அவனுடன் ஒரு பாலத்தின் மீது சாலையைக் கடக்கத் தெரியாமல் பின் தொடரும் காட்சி நம் மனதைப்பிசையும். அவள் இன்னமும் விவரம் அறியாத சிறுமி தான். இது போல வட பால்ய விவாகம் நடந்தேறிய சிறுமிகளையும் பதின்ம வயதில் கர்ப்பம் சுமக்கும் சிறுமிகளையும் நாம் வடஇந்திய கிராமங்களில் அதிகம் பார்க்க முடியும் என்பது மிகவும் வேதனை.

புட்டிலாலின் கிராமத்துக்கு வரும் பூலான் அங்கே , பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என தாகூர் பெண்களால் விரட்டப்படுகிறாள். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நீர் எடுக்கும் மிகவும் ஆழமான கிணற்றில் இருந்து நீர் இறைத்து மண்பானையில் நிரப்பி தூக்க முடியாமல் தூக்கி வருகிறாள். அதை அங்கே விளையாடும் சக வயதுடைய உயர்சாதிக்காரகள் வீட்டு பிள்ளைகள்  உண்டிக்கோல் கொண்டு கல்லெறிந்து உடைத்து விட, அவள் அவர்களை  நோக்கி  பெட்டை நாய்களுக்கு பிறந்தவர்களே!!!. உங்களுக்கு கிழவி தான் பெண்டாட்டியாக அமைவாள்!!! என்று சாபம் விட. பானை உடைந்ததை அதட்டிக்கேட்ட மாமியாருக்கு அது உடைந்துவிட்டது, ஏன் தாகூர் பெண்களைப்போல எனக்கு வெங்கலப்பானையை நீர் பிடித்துவர தரவில்லை?!!! ,என்று பதிலுறைக்கிறாள்.  இதைக் கேட்டு கொதித்த  புட்டிலாலின் அம்மா புட்டிலாலை தூபமிட.

ன்று இரவே  புட்டிலால்,  பூலான் பூப்படையாத நிலையிலேயே அவளை  அவன் அம்மாவின் வெளிக்காவலுடன் வன்புணர்கிறான், அக்காட்சியில் பூலான் இறைஞ்ச , வெளியே அவள் இறுக்கத்துடன் ஜெபமாலை கொண்டு ஜெபிக்கும் காட்சி கர்ண கொடூரம், ஆனால் இப்படிப்பட்ட ருத்ராட்சப்பூனைகளும் கொண்டது தானே இச்சமூகம். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள் பூலான், உடல் முழுக்க நகக்குறிகளும், பற்கடி தடயங்களும் சிறு குழந்தை மனதாலும் உடலாலும் நொறுங்குகிறாள். மறு நாளே ஆடுமேய்க்க போகச்சொல்லி கணவனால் விரட்டப்பட்டவள், தன் பெற்றோர் இருக்கும்  ஊருக்கே ஓட்டமெடுக்கிறாள். இதனால் பூலானைக் கைவிட்டுவிட்டு விரைவில் புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.

சில காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது. இப்போது 15 வயது பூலான் தேவியை நாம் பார்க்கிறோம்.  உயர்சாதி தாகூர் வீட்டு இளைஞர்கள் பூலானை படுக்கையில் அடையத் துடிக்கின்றனர். அதில் ஊர் தலைவரின் மகன்  பூலான் விறகு பொறுக்கப் போகையில் அவளை தொடந்து போய்  படுக்கைக்கு அழைத்தும், கெட்டவார்த்தை பேசியும் துன்புறுத்தி வருகிறான். ஒரு முறை அவன் பின் தொடர்ந்து போய் வன்புணர எத்தனிக்க, அவனை பூலான்  தாக்கிவிட்டு ஓட. அதில் ஆத்திரமடைந்த தாகூர் இளைஞர்கள். பூலானை செருப்பால் அடித்து உதைத்து, ஆடைகளை கிழித்து பஞ்சாயத்தில் நிறுத்திவிடுகின்றனர்.

வள் ஊர் தலைவரின் மகனை  எனக்கு அரிக்கிறது. என்று  சரசத்துக்கு அழைத்தாள். என்று அபாண்டமாக குற்றம் சாட்டப்படுகிறது. பூலானின் தந்தையை  ஊரார் மிகவும் கீழ்தரமாக ஏசுகின்றனர். அவர்களுக்கு பேசக்கூட வாய்ப்பளிக்கப்படவேயில்லை. பூலானை வன்புணர எத்தனித்தவனின் அப்பனே தீர்ப்பு சொல்கிறான். பூலானால் தாகூர்களின் மரியாதைக்கு பங்கம் வந்துவிடும். அவள் தாகூர்களுக்கு முன் முக்காடு போட மாட்டாள், தாகூர்களைப்பார்த்தால் காலை தொட்டு வணங்கமாட்டாள். ஆகவே பூலானை ஊரை விட்டே ஒதுக்கி வைக்கவேண்டும். என்று கூறுகிறான் அந்த ஊர் தலைவன்!!!.

பூலான் போக்கிடமின்றி  அலைந்தவள் பக்கத்து கிராமத்திலிருக்கும் தன் ஒன்றுவிட்ட அண்ணன் கைலாஷின்[சௌரப் சுக்லா- ஹேராமில்  லால்வானி] வீட்டுக்குச் செல்கிறாள். ஆனால் அவளுடைய பொல்லாத  மனைவி கைக் குழந்தைக்காரி பூலானை வெறுக்கிறாள், அங்கே கைலாஷ் சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் கொள்ளைக்காரர்களின் குழுக்களுக்கு மளிகை சாமான்களும் பாலும் கொண்டு போய் தருகிறான், பூலானும் கூடச் செல்கிறாள். அப்போது மல்லா இனத்தைச் சேர்ந்த விக்ரம் மல்லா மஸ்தானா [நிர்மல் பாண்டே] என்னும் கொள்ளைக்கார இளைஞனை பூலான் சந்திக்கிறாள். கணவனையும், பெற்றோரையும் பிரிந்த பூலானை அடங்காப்பிடாரி என்று எண்ணி விக்ரம் வெறுக்கிறான்,. இப்போது சில வாரங்கள் கடந்த நிலையில் கைலாஷின் மனைவி பூலானை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லுகிறாள்.ஆனால் கைலாஷ் மனைவியை தடுக்கிறான். அவளின் சுடு சொல் தாளாமல் , அவமானம் தாங்காமல் வெளியேறிய பூலானை கைலாஷ் சமாதானம் செய்கிறார், இருந்தும் தன்மானத்தால் அங்கேயிருந்து மீண்டும் கொடிய தாகூர்கள் வசிக்கும் தன் ஊருக்கே செல்கிறாள் பூலான்.

து ணிச்சலுடன் காவல் நிலையத்துக்குள் செல்கிறாள். ஊராருடன் பஞ்சாயத்து பேச சொல்லி நியாயமும் கேட்கிறாள்.  அங்கே பூலானின் தைரியமான பேச்சை முன்பே நிறைய கேள்விப்பட்டு எரிச்சலிலிருந்த  காவலர்கள், அவள் மீது முந்தைய நாள் ஊர் தலைவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, நிலுவையிலிருந்த விபச்சாரம், திருட்டு வழக்குகளை பொய்யாக ஜோடிக்கின்றனர். பூலானுக்கும்  சம்பல் கொள்ளைக்காரர்களுடன்  வியாபாரத் தொடர்பு இருப்பதாக பொய் சாட்சிகளையும் ஏற்பாடு செய்கின்றனர். அவளின் அண்ணன் கைலாஷ் பூலானை விக்ரம் மல்லா குழுவிற்கு கூட்டிக்கொடுத்தானா?!!! அவர்கள் அசுத்தமானவர்கள் நாறுவார்கள், நாங்கள் மணம் வீசுவோம், அங்கே நீ எத்தனை பேரை புணர்ந்தாய்? எங்கள் இருவரை  நீ தாங்குவாயா? நான் முன்வழியாக புணர்வேன், இவன் ஆசனவாய் வழியாக புணர்வான் , சம்மதம் தானே?!!!  நீ தான் படு என்றதும் காலை உடனே விரிப்பாயே?!!! அரிப்பெடுத்தவளே!!! என்று ஏளனம் செய்கின்றனர்.

ன்று முதல் மூன்று நாட்கள்.காவல் நிலையத்திலிருக்கும் உயர் அதிகாரி முதல், கடைநிலை காவலாளி வரை லாக்கப்பிலேயே வைத்து பூலானை வன்புணர்கின்றனர்.மார்பு, முதுகெல்லாம் கடித்தும் கீறியும் வைத்திருக்கின்றனர். அவள் தன் அப்பாவிடம் அதைக்காட்ட அவர்  வாய் பொத்தி அழுகிறார். அதற்கு போலீஸ்காரர்கள்,உன் மகள் படு என்றால் படுக்கிறாளா?காட்டுக்கூச்சல் போட்டாள்.அதனால் தான் இப்படி விளாசவேண்டியதாயிற்று, உன் ஏனைய மகள்களும் இப்படித்தானா புட்டி லால்?!!! என்று ஏளனம் செய்கின்றனர்.

ணவனின் கொடுமையிலிருந்து தப்பிய பூலான் பெரியவளானதும் காட்டு மிராண்டித்தனமான காவலர்களால் வன்புணரப்படுகிறார். வன்புணர்வதற்கு மட்டும்  தாகூர்களுக்கும் காவலர்களுக்கும் கீழ்சாதி என்பது ஒரு தடையாகவே இருக்கவில்லை.  சட்டம், நீதியை பாதுகாக்க வேண்டிய காவலரே  பூலானிடம் நெறிமுறையின்றி நடந்தனர்.  கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர். இப்படி பூலானிடம் இளம் வயதில் வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், போலீஸ் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள்.

வள் காவலர்களால் கொடூர தாக்குதல்களுக்கு  ஆளாகி இருப்பதை கண்டு சற்றும் மனமிறங்காத தாகூர்கள், பூலானின் தந்தையிடம் பூலானை மீட்க வேண்டுமானால் போலீசாருக்கு 25000 ரூபாய் ஜாமீன் தொகை தரவேண்டும்.  அதை நாங்கள் தருகிறோம். அதை நீங்கள் பொறுமையாக திருப்பிக் கொடுங்கள் என்று ஓநாய் சூழ்ச்சியுடன் போலீசாரிடம் வந்தவர்கள். பூலானை ஜாமீனில் விடுவிக்கின்றனர். சில நாட்கள் உருண்டோடுகிறது.

திடீரென்று ஊருக்குள் நுழைந்த   பாபு குஜார் சிங் [ அனிருத் அகர்வால்] என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை தன்னுடன் அழைக்கிறான்.அன்று ஜாமின் தொகை கட்டிய தாகூருக்கு 25000ரூபாய் பணத்தை நீ  திருப்பி தரவில்லை,அதை நீங்கள் திருப்பித் தரும் வரை  பூலான் எனக்கு அடிமை !!! என்று முழங்குகிறான். பூலானை வெளியே வரவழைக்க அவளின் தம்பியின் மூக்கில் கத்தியை வைத்து கொன்று விடுவேன் என்று மிரட்டியதும் ஒளிந்திருக்கும் பூலான் பதறியடித்து வெளியே வருகிறாள். அவளைக் கைகளைக் கட்டி கடத்திச் செல்கிறான். அங்கே விக்ரம் மல்லாவைப் பார்க்கிறாள் பூலான்.அவன் பெண்களை நாம் தாக்கக் கூடாது என்று சொல்லியும் கேட்கவில்லை அந்த பாபு குஜ்ஜார் என்னும் ஏழு அடி உயர அரக்கன். அவன் முகம் அத்தனை விகாரம். பூலானை சதா சர்வ காலமும் சக கொள்ளையர்கள்  முன்னிலையில் வன்புணர்கிறான்.

தில் அதே மல்லா இனத்தைச்சேர்ந்த விக்ரம் மல்லாவுக்கு மட்டும் உடன் பாடில்லை. ஒரு நாள் படகில் ஆயுதங்கள்    வந்து இறங்குகின்றது, அதை இறக்கி கொண்டுவர மல்லாக்களை அனுப்புகிறான் பாபு குஜ்ஜார், விக்ரம் மல்லா இடைமறித்து  ஏன் உன் தம்பியை அனுப்பவில்லை ? என்று கேட்க, அதற்கு அவன் உன் அம்மாவை வன் புணர உயிரோடு இருக்க வேண்டும், என்று திமிராக உரைக்கிறான். போலீசார் விக்ரம் மல்லாவின் நண்பர்களான இரு மல்லாக்களை சுட்டுக்கொன்றுவிட மிகவும் இடிந்து போகிறான். போலீஸ் துரத்திக்கொண்டே வருகிறது .அவன் கும்பலுடன் தப்பி ஒரு மலை மீது ஏறுகிறான்.

தொடர்ந்து முன்னேற முடியாத போலீசார் அக்கரையிலேயே நின்று விடுகின்றனர், பாபு குஜ்ஜார் சொன்ன அவச்சொல்லும் தாகூர்களின் மீதான் வெறுப்பும் விக்ரம்மை கொதிப்படையச் செய்கிறது, இப்போது பாபு குஜ்ஜார் மலைச்சரிவிலேயே பூலானைக் கிடத்தி சுற்றிலும் தன் தாகூர் இன கொள்ளையரை காவலுக்கு வைத்துவிட்டு முயங்குகிறான். வழக்கம் போலவே மல்லாக்கள் எல்லோரும் அமைதியாக இதைப்பார்க்க. விக்ரம் மல்லா ஒருகட்டத்தில் தாள முடியாமல் பாபு குஜ்ஜார் சிங்கை  தலையில்  சுட்டு வீழ்த்துகிறான். அவனுடன் சேர்த்து விக்ரம்மை எதிர்த்த நால்வர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்,

னி கொள்ளையர் குழுத்தலைவன் ஸ்ரீராம் தாகூர் சிறையிலிருந்து வரும் வரை  நானே தலைவன் என்கிறான் விக்ரம். இப்போது  பூலானுக்கு குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை கற்றுத் தருகிறான். இப்போது அவர்கள் காதலர்களாகவே மாறி குடும்பம் நடத்த ஆரம்பித்தும் விட்டனர். பூலான் இப்போது வீர தீர சாகசங்களை கற்று தேர்கிறாள். பூலான்  மற்றும் விக்ரம் மல்லாவின் மீது கொலை, கடத்தல், கொள்ளை, சூறையாடல் என்று 48 பெரிய குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன. வடமாநிலங்களையே குலைநடுங்க வைத்த பூலான் தேவி குள்ளமான பெண் ஆவாள்.எப்போதும் தோளில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கும். துப்பாக்கி தோட்டாக்கள் கொண்ட பட்டையை  உடம்பை சுற்றி அணிந்திருப்பாள்.

ப்போது அருகே உள்ள ஒரு மல்லாக்களின் கிராமத்துக்கு விக்ரம் மற்றும் பூலான் சக குழுவினர் சகிதமாக வருகின்றனர்,கோவிலில் காணிக்கை வைத்து வழிபடுகின்றனர்,அங்கே இவளை பெண் என்று  பார்த்த சிறுவர்களிடம் இவள் உங்களை தாகூர்களிடமிருந்து காக்க வந்த காளிமாதா.என்று அவள்  தலையில் சிகப்பு துணியை கட்டி விடுகிறான். இந்த கட்டத்திலிருந்து பூலான் காளிமாதா அவதாரம் எடுத்தது போல தன்னை எண்ணிக் கொள்கிறாள். விக்ரம் மல்லா அவளுக்கு இனி நீ பூலான் தேவி என அழைக்கப்படுவாய் என முடிசூட்டிவைக்கிறான்.அவளது உயரம் ஐந்து அடிக்கும் குறைவே. ஆனால் அவளது தோற்றம் மிகவும் கம்பீரமாக ஒரு காளிமாதாவை போல இருக்கிறது. குதிரை  மிது ஏறி அவள் வந்தால் என்றால் அந்த சுற்று வட்டாரமே நடுங்குகிறது. கிராமவாசிகள் மண்டியிட்டு வணக்கம் செலுத்துகின்றனர். காக்கிச்சட்டையில்  நெற்றியைச் சுற்றி சிவப்பு நிற பட்டையை கட்டியிருப்பது அவளுடைய தனிச்  சிறப்பாகும்.

ப்போது கனஷ்யாம் தாகூர் [அனுபம் ஷ்யாம்] என்னும் உயர்சாதி கொள்ளையனை பூலானின் கிராமத்து தாகூர்கள் அனுப்பி விக்ரமிடமிருந்து பூலானை மீட்டு தரும்படி கேட்கின்றனர். அதற்காக விக்ரமிடம் வருகிறான் கனஷயாம்.அவனுக்கு தாகூர்கள் அளித்த ஜாமீன் தொகையான 25000 ரூபாயுடன் சேர்த்து வட்டியுடன் பணம் தந்து கடனை அடைக்கிறான் விக்ரம் மல்லா. கன்ஷ்யாம் சொல்கிறான். உன் கண்களில் தாகூர் மீதான வெறுப்பை நான் காண்கிறேன் விக்ரம்,அது மிகவும் ஆபத்து.பூலான் உன்னிடம் இருப்பது உனக்கு அழிவு,அதிர்ஷ்டத்தை தராது, என்கிறான், அதற்கு விக்ரம் மல்லா பாண்டிட்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை வாழ்வில் தாங்களே தான் தேடிக்கொள்வர் என்பது தானே உண்மை?!!! ,என்று மடக்கி அவனை திருப்பி அனுப்புகிறான். தன்னை பணம் தந்து மீட்ட விக்ரம் மீது பல மடங்கு மதிப்பு வந்து விடுகிறது பூலானுக்கு.

விக்ரம் மல்லாவின் கொள்ளையர் குழுவில் மல்லாக்களும் தாகூர்களும் இரண்டு பிரிவாக,  உள்ளனர். விக்ரம் மல்லாவை மல்லர்கள் ஆதரித்தும், உயர்சாதி தாகூர்கள் வெறுத்தும் வருகின்றனர். கொள்ளை கும்பல் தலைவன் ஸ்ரீராம் தாகூரின் [ கோவிந்த் நாம்டியோ ] வரவுக்கு ஆவலாக காத்திருந்த அவர்கள் ஸ்ரீராம் தாகூர் வந்ததும் அவன் பக்கம் தாவுகின்றனர். ஸ்ரீராம் தாகூர் ரூபத்தில் மீண்டும் பூலானுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் தரப்படுகின்றன. கோபக்கார இளைஞன் விக்ரம் மல்லாவை நயவஞ்சகமாக தீர்த்துக் கட்டி விட்டு பூலானை அடைய துடிக்கிறான் ஸ்ரீராம் தாகூர்.அவனுக்கு உறுதுணையாக அவன் தம்பி லால் தாகூரும் இருக்கிறான், இருவருமே போலீஸ் உளவாளிகள். அவ்வப்பொழுது போலீசாருக்கு சக கொள்ளயர்களை காட்டிக்கொடுக்கின்றனர்.

ப்படி ஒரு நாள் விக்ரம் மல்லாவை ஸ்ரீராம் தாகூர் மறைந்திருந்து முட்டியில் சுட்டு விட, பூலான் தன் உயிரைப் பணயம் வைத்து அவனை அருகே உள்ள நாக்பூர் நகருக்குள் கூட்டிச் சென்று ஒரு அறையைப் பிடித்து விக்ரம் மல்லாவை கிடத்தி வைத்தியம் பார்க்கிறாள். அங்கே ஓரிரு வாரங்கள் விக்ரம் மல்லாவுடன் உல்லாசமாக குடும்பம் நடத்துகிறாள் பூலான் தேவி.

ன் வாழக்கையிலேயே அவள் சுகித்து இடுந்திருப்பாள் என்றால் அந்த ஓரிரு வாரங்களாகத் தானிருக்கும் எப்படியெல்லாம் இன்பம் துய்க்க முடியுமோ? அப்படியெல்லாம் துய்க்கின்றனர். அதிலும் ஒரு பேரிடியாக விக்ரம் மல்லாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவன் இருவரையும் அடையாளம் கண்டுவிட்டு பூலானிடம், ஒரு ஆளனுப்பி தன் மகளின் திருமணத்துக்கு சீராக ஸ்கூட்டர் கொடுக்க 6ஆயிரம்  ரூபாய் பணம்  கேட்கிறான். அதுவும் ஒரு மணிநேரத்தில் வேண்டும் என்று மிரட்டுகிறான். அங்கிருந்து ஒருவழியாக பூலானும் விக்ரமும் தப்பித்து விலகி தன் சொந்த கிராமமான கபர்வா வருகின்றனர். இப்போது பூலான் தேவியின் தந்தை  நீ இங்கே வந்ததை தாகூர்கள் அறிந்தால் என்ன நடக்குமோ? நீ உன் கணவனிடம் இருந்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காது!!! என்று விரக்தியாகச் சொல்லுகிறார். மிகுந்த மன உளைச்சலடைகிறாள் பூலான். தங்கைக்கு மணமாகி அவளின் குழந்தைகளை கொஞ்சக்கூட முடியாத ஒரு நிலை, பெற்ற தாயிடம் மடியில் தலைவைத்து தூங்க முடியாத ஒரு இழிநிலை, இதற்கு காரணம் புட்டிலால் தானே ? என்று ஆவேசம் கொள்கிறாள்.

பூலான்தேவி தன்னுடைய முன்னாள் கணவன் புட்டிலாலை அவனது கிராமத்திற்கே சென்று  அவனை துப்பாக்கி கட்டையால் அடித்து துவைத்து கழுதை மீது ஏற்றி ஊர்வலம் வரச்செய்கிறாள் ,ஒரு மொட்டை மரத்தில் இறுக்கிக் கட்டுகிறாள். அவனை துப்பாக்கி கட்டையால் அடிக்கிறாள். கூடி வேடிக்கை பார்க்கும்  மக்களிடம் போலீசாரிடம் புகார் கொடுங்கள். எவனாவது சிறுமியை திருமணம் செய்ததை நான் அறிந்தால் அவனை கொல்லுவேன் என்று கர்ஜிக்கிறாள். தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கிறாள். அந்தப்புள்ளியில் சிறுவயதில் உடல் மற்றும் மனரீதியாக தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறாள்.

ந்த நிலையில்   ஸ்ரீராம் தாகூருக்கும் விக்ரம் மல்லா கொள்ளை கோஷ்டிகளுக்குள் பூசல் ஏற்படுகின்றது . ஏனைய மல்லா சாதிக் கொள்ளையர்கள் பூலான் தேவி வசமே தங்கிவிடுகின்றனர். 1980  ஆகஸ்டு, அப்போது  தாகூர்  கொள்ளையர்கள் ஓரிடத்தில் ஒளிந்திருந்த விக்ரம் மல்லாவை சூழ்ச்சி செய்து  ஒளிந்திருந்து சுட்டும் கொன்று விடுகின்றனர். கதறியழுதபடி இருந்த பூலான்தேவி மீண்டும் ஸ்ரீராம் தாகூரால் கடத்தப்படுகிறாள்,  எல்லோரும் கூடி அவளை அடித்த பின்னர், மயக்கமான பூலான் தேவியை, மல்லர்கள் ஓட்டும் படகில்  கிடத்தி . பிக்மாய் என்னும் கிராமத்துக்குள் கொண்டு வருகின்றனர்.

ங்கே ஒரு மாட்டுதொழுவத்தில் அவளைக் கட்டிப்போட்டு, சித்ரவதை செய்தும் வெறி அடங்காத தாகூர்கள். ஊர் தலைவன் ஸ்ரீராம் தாகூர் உட்பட, சுமார் 20 பேர் ஒன்றன் பின் ஒருவராக பூலானை வன்புணர்கின்றனர். மிகவும் துயரமான காட்சியது. அக்காட்சியில் ஒரு ஆணுக்கு பெண் இனத்தின் மீது மிகுந்த பச்சாதாபமும், ஆணிணத்தின் மீதே மிகுந்த வெறுப்பும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. காலங்காலமாக பெண்ணின் மன உறுதியை குலைக்க அவளின் கற்பை சூறையாடுவதை ஆண்கள்? எப்படி கையாண்டு வருகின்றனர் என்று விளங்கும். வன்புணர்வுக்கு பின்னரும் ஆத்திரம் தீராத தாகூர்கள் அவளை   தாகூர் இனப்பெண்கள் நீரெடுக்கும் கிணற்றிற்கு அழைத்துப்போய் நிர்வாணப்படுத்தி நீர் இறைக்க சொல்கின்றனர். இதோ இவள் இந்த மல்லா சாதிப் பெண் தான் தேவியாம், கடவுளாம்!!!? இது என்னைப்பார்த்து அம்மாவை புணர்பவன் என்று சொல்கிறது இது. இனி  ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவன்  வெகுண்டெழுந்தாலும் இது தான் கதி!!!!புரிந்ததா?!!! .என்கின்றனர்.

பூலான் தேவி மூன்று வாரங்களுக்கு பிறகு பிக்மாயிலிருந்து தப்பியவள் போக்கிடமின்றி தன் அண்ணன் கைலாஷின் வீட்டு வாசலிலேயே போய் விழுகிறாள் , அவன் அவளை  உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் செல்கிறாள், பூலான்தேவி. விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க துடித்த பூலான்தேவி, மான்சிங் [மனோஜ் பாஜ்பாய்] என்ற கொள்ளைக்காரனுடன் இணைகிறாள். அவன் பூலான் தேவியை மிகப்பெரிய கொள்ளையர் படைத் தலைவனான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பாபா முஸ்தகிமிடம் [ராஜேஷ் விவேக்] கொண்டு போய் அறிமுகப்படுத்துகிறான்.

முஸ்தகிம் பாபாவின் முதற்கட்ட உதவியால் அவரின் கொள்ளையர் படையைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்குகிறாள். இப்போது அவளிடம்  25 பேர்களும் அவர்களுக்கு 16 துப்பாக்கிகளுமே உள்ளன , அதை வைத்து பூலான் தேவியும் மான்சிங்கும் பக்கத்து கிராமத்தை கொள்ளயடிக்கின்றனர். அது தான் பூலான் தேவி தலைமையில் நடத்தப்பட்ட முதல் கொள்ளை, அதன் பின் அவள் சென்ற இடமெல்லாம் சிறப்பு தான். அவள் பெரும்பொருள் ஈட்டுகிறாள். பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைமக்களுக்கு தானமும் செய்கிறாள்.

1981 ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி , இப்போது பூலான் தேவியை மிகவும் மெச்சிய பாபா முஸ்தகிம், வடக்கு டெல்லி அருகேயுள்ள பிக்மாய்   கிராமத்தில் பூலானின் எதிரி ஸ்ரீராம் தாகூர் திருமணம் வைத்திருக்கிறான் என்று மான்சிங் தகவல் கொடுக்கிறான். அன்றே  தனது கொள்ளை கோஷ்டியுடன் செல்கிறாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் அளித்தனர் என்று குற்றமும் சாட்டுகிறாள்., யாருடைய இறைஞ்சலுக்கும் அன்று அவள் செவிசாய்க்கவேயில்லை,

போதாதற்கு இவளது கட்டளைக்கு செவிசாய்த்து தயாராயிருந்த கொள்ளையர் கூட்டம் வேறு!!!. விடுவாளா?!!! வீடு வீடாகச் சென்று தன் எதிரிகளை தேடி இழுத்துவந்தாள் பூலான் தேவி ,அந்த ஸ்ரீராம் தாகூர், லால் தாகூர் சகோதரர்கள் மட்டும் அன்று சிக்கவேயில்லை, அந்த ஆத்திரம் வேறு, ஏற்கனவே விக்ரம் மல்லா பூலானிடம் ஒரு கொலைசெய்தால் உன்னை தூக்கில் போடுவர். 20கொலைகளைச் செய்தால் உன்னை பத்திரிக்கையாளர்கள் பிரபலமாக்குவர்  ,என்று சொன்னது வேறு நினைவுக்கு வருகிறது.


கிராமத்தில் தாகூர் சாதி ஆண்கள் பெண்கள்   எவ்வளவோ கெஞ்சினர் , ஆனால் பூலான்தேவி அந்த தாகூர் சாதி ஆண்களை வரிசையாக நிற்க வைத்தாள். சிலரைத் தான் முட்டியில் சுட சிலரை தன் கூட்டாளிகள்  கன்னாபின்னாவென சுட்டுத் தள்ளினர். அதில் 22 பேர் சம்பவ இடத்திலேயே செத்து மடிந்தனர். ரத்த கால்வாயே அங்கே ஓடுகிறது. ஒரு குழந்தை வீல் என்று அழுவதை நாம் பார்க்கிறோம். அன்று 8 பேர் கை கால்களை இழந்தார்கள். கணவன் சாவதை, அப்பா சாவதை, அண்ணன் சாவதை என்று ஒரு பெருங்கூட்டமே வாய் பொத்தி கண்ணீர் பொங்க வேடிக்கைப் பார்த்தது. அதில் புறப்பட்ட சிலரால் பின்னாளில் பூலான்தேவி  பழிதீர்க்கப்படப் போவதை அன்று அவள் அறிந்திருக்கவில்லை.

ன்றைய தினம் அக் கிராமத்துக்கு மரண தினம் போலும், காலன் அங்கேயே தங்கியிருந்து தாகூர் இன ஆண்களின் உயிரைப் பறித்துச் சென்றான். சுடுகாட்டில் பிணத்தை எரிக்க இடமில்லை, தொடர்ச்சியாக அக்கரையிலிருக்கும் சுடுகாட்டுக்கு படகிலிருந்து பாடைகள் இறக்கபட்டும்,   சிறு மகனால், வயது முதிர்ந்த தந்தையால், அவர்கள் யாருமில்லாத பட்சத்தில் உறவினர்களால் ஈமைக்கிரியைகள் செய்யப்படுகின்றன. இரவாகி விடுகிறது. மறுகரையிலிருந்து தாகூர் இனப்பெண்கள்  அக்கரையில் எரியும் சிதைகளை கண்ணீருடன் வேடிக்கைப்பார்க்கின்றனர்.

ந்த கொலை சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்குகிறது. பூலான் தேவியை பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவுகிறது. அது மட்டுமல்ல உத்தரப் பிரதேச மாவட்ட அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த படுகொலை.அப்போது உத்தரபிரதேச முதல் மந்திரியாக இருந்த வி.பி.சிங் 1982 ஆம் ஆண்டு இப்படுகொலைகளுக்கு தார்மீகப் பொருப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநில போலீஸ் படைகளும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்படுகின்றன. காடுகளில் புகுந்து பூலான்தேவியை தேடுதல் வேட்டையாடினார்கள். ஆனாலும் அவள் சிக்கவில்லை. பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பூலானுக்கு உதவிய பாபா முஸ்தகிம் போலீசாரால் கைவிலங்கிட்டு என்கவுண்டர் செய்யப்படுகிறான். இவை அனைத்துமே தாகூர் சாதி ஓட்டுக்களுக்காகவே அரசியல்வாதிகளால் இந்த என்கவுண்டர்கள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதையும் நாம் பார்க்கிறோம். தாழ்த்தப்பட்ட சமுதாய ஓட்டுக்களும் அந்த பக்கிகளுக்கு வேண்டியிருப்பதால் பூலான் தேவியை மட்டும் உயிருடன் பிடிக்க எண்ணியிருக்கின்றனர்.அதற்கு அவர்கள் கண்டுபிடித்தது தான்   பொதுமன்னிப்பு.

காவல்துறையினரின் கண்ணில் படாமல் திரிந்த பூலான்தேவி அப்போதும் தனது எதிரிகளை, துப்பு கொடுப்பவர்களை தேடித் தேடி தீர்த்துக்கட்டியபடியே இருந்தாள். ஒரு கட்டத்தில் நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டதாகக்கூட  பேசப்பட்டது. ஆனாலும் கொஞ்ச நாளிலேயே அவள் உ.பி.க்குள் திரும்பினாள். 1982 ம் ஆண்டு டிசம்பரில் ஜலான் மாவட்டத்தை சேர்ந்த 3 மிராசுதாரர்களையும் கடத்திச் சென்றாள். இதுவே அவள் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாக அமைந்துவிட்டது. பூலான் தேவியின் குழுவைசேர்ந்த மான்சிங் நீங்கலாக அத்தனை கொள்ளையர்களும் போலீசாரால் விரைந்து என்கவுண்டர் செய்யப்படுகின்றனர்.  அந்த செய்தி  அனுதினமும் சுடச்சுட செய்திகளில் முழுப் பக்கத்துக்கு வருகிறது.

குலை நடுங்க வைக்கும் கொள்ளைக்காரியாக இருந்தவள்  இப்போது கொள்ளைத்தொழிலை விட்டு சரணடைய சம்மதிக்கிறாள்.
பூலான் தேவி சரணடைய விதித்த நிபந்தனைகள்:-
  • தனக்கு மரண தண்டனை தரக்கூடாது
  • தன் கொள்ளையர் குழு நபர்களுக்கு 8 ஆண்டுக்கு மேல் தண்டனை தரக்கூடாது
  • தன் தம்பிக்கு அரசு வேலை கிடைக்கச்செய்ய வேண்டும்
  • தன் தந்தைக்கு அரசால்  நிலம் ஒதுக்கித் தரப்படவேண்டும்.
  • சரனைடைகையில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்
  • சிறையில் இருந்து விடுதலை ஆனதும்,தன் தற்காப்புக்கு ஆயுத உரிமம் அரசு தரவேண்டும்
14, பிப்ரவரி 1983ஆம் வருடம் துப்பாக்கியை கீழே போட்டு  மனம் திருந்தி அன்றைய  முதல்வர் அர்ஜுன் சிங் முன்னிலையில் காந்தி மற்றும் துர்க்கை படத்தின் முன்னர்  உத்திரப் பிரதேச போலிசாரிடம் ,சுமார் 10000 மக்கள் முன்னிலையில் சரணடைந்து  11 ஆண்டுகள் கடும் சிறைவாசம் அனுபவித்தார். 1994 ஆம் ஆண்டு பரோலில் வெளிவந்தார். அவர் ஏகலைவா சேனா என்னும் தாழ்த்தப்பட்டோருக்கான தற்காப்பு பயிற்சி இயக்கத்தை ஆரம்பித்தார். பின்னர் அரசியலில் புகுந்து பாராளுமன்ற உறுப்பினரானார். அன்று ஒரு நாள் மதியம் வழக்கம் போல  தன் வீட்டுக்கு வந்தவர் ,வீட்டு வாசலிலேயே தாகூர் இனத்தவர்களால் எந்திரத்துப்பாக்கி கொண்டு சுட்டுகொல்லப்பட்டார். இந்தப்படத்தில் தன்னை கேட்காமல் திரைப்படத்தில் சித்தரித்ததற்காக வழக்காடி 60,000 அமெரிக்க டாலர் நஷ்ட ஈடும் பெற்றார்.

1996 ஆம் ஆண்டு மிர்ஸாபூர் தொகுதியில்  சமாஜ்வாதி கட்சியில் மக்களைவைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1999ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசுக்கு கூட பரிந்துரைக்கப்பட்டார்.   ஜூலை 25, 2001 அன்று புது தில்லியில் உள்ள இல்லத்தில் இருந்து தன் காரில் ஏறி புறப்படும் சமயத்தில் ஆட்டோ ரிக்சாவில்   வந்த தாகூர் சாதி வெறியர்களால் சுடப்பட்டு மரணமடைந்தார் பூலான் தேவி.

ன்றும் இந்தியாவில் , கிராமிய சமூக சூழலில் சாதிய முரண்களும் நிலம் சார்ந்த சொத்துடமைகளும் அதி முக்கியமான பிரச்சினைகளாக இருக்கின்றன. இதற்கு உடனடி உதாரணமாக செப்டம்பர் 26- 2006 ஆம் ஆண்டு  நடந்த கெர்லாஞ்சி படுகொலையைச் சொல்லலாம். நாகபுரி அருகே கெர்லாஞ்சி கிராமம். அம்பேத்கரின் அதே மஹர் சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்திடமிருந்த ஐந்து ஏக்கரில் இரண்டு ஏக்கரை உயர் சாதியினர் நிலத்துக்கான சாலைக்காக முன்பே எடுத்துக்கொண்டார்கள். அடுத்து, மீதி நிலமும் தங்களுக்குப் பாசனக் கால்வாய்க்கு வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்கள். இதற்கு உடன்படாத குடும்பத்தினருக்கு ஆதரவாக இருந்தவர் சித்தார்த் என்ற உறவினர். அவருக்கும் குடும்பத் தலைவி சுரேகாவுக்கும் கள்ளத் தொடர்பு என்று சொல்லி, உயர் சாதியினர் அவரை அடித்தார்கள். அவர் போலீஸில் புகார் செய்ததில் 28 பேர் கைதானார்கள்.

அத்தனை பேரும் ஜாமீனில் வெளியே வந்த உடனே, ஊரையே திரட்டி, சுரேகா (45), மகள் பிரியங்கா (17) , மகன்கள் ரோஷன் (23), சுதிர் (21) நால்வரையும் மேல் சாதியினர் சுமார் 150 பேர் கூடிக் கொலை செய் தார்கள். இரண்டு பெண்களும் நிர்வாண ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டு, பலராலும் பாலியல் வன்முறை செய்யப்பட்டார்கள். அனைவருக்கும் பிறப்பு உறுப்புகளில் வெட்டு, சிதைப்பு. கொல்லப்பட்ட உடல்கள் ஊருக்கு வெளியே பல மூலைகளில் தூக்கி எறியப்பட்டன. இத்தனையையும் ஒளிந்துகொண்டு பார்த்த குடும்பத் தலைவர் பய்யிலால், போலீஸுக்கு போன் செய்தும் யாரும் வரவில்லை.மறு நாள்தான் போலீஸ் புகாரைப் பதிவு செய்தது. மருத்துவப் பரிசோதனையில் பாலியல் வன்முறை இல்லை என்று அப்பட்டமாக பொய் சொன்னதை, தலித் அமைப்புகள் கடுமையாக விமர்சித்தும் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை,போன உயிர் தாழ்த்தப்பட்ட சாதியினரின் உயிராதலால் கேள்வியே இல்லை.கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தலித் பெண் பிரியங்கா, ப்ளஸ் டூ.வில் முதல் இட மாணவியாம். என்.சி.சி. யில் வேறு சிப்பாயாக இருந்தாராம். சுதிர், பட்டதாரி. ரோஷன், பார்வையற்றவர் என்றாலும், ஓரளவு படித்தவராம்.கல்வியை நம்பி மேலே நகர்ந்து கொண்டு இருந்த ஒரு தலித் குடும்பம், அரசியல் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்திருந்த ஊர் மேல் சாதியினரால் நசுக்கப்பட்டது 21.ம் நூற்றாண்டில் தான்!  தலித்துகளுக்கு மட்டும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவேயில்லை என்று இதைப்படிக்கும் ஒருவருக்கு நிதர்சனமாக புரியும்.நாமும் இதே இந்தியாவில் தான் மிகவும் பாதுகாப்பாக வாழ்கிறோம்.

பிறக்கும் போது ஒருவர் கெட்டவர்களாக பிறப்பது இல்லை. அவர்கள் வளரும் சாதியச் சூழல் தான் அவர்களை நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ மாற்றுகிறது. இன்றைய பாரத சமுதாயத்தில் உள்ளவர்களை குற்றவாளிகளாக மாற்றுவதற்கு முக்கிய காரணமாக சாதிப் பிரிவினையும் சாதி அடக்கு முறையும் பெரும்பங்கு வகிக்கிறது. இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சாதிவெறியை ஊட்டாமல் சாதியை அவர்களிடமிருந்து மறைக்கவும், மறக்கடிக்கவும் பாடுபடவேண்டும். உலகசினிமா காதலர்கள் , சரித்திர ஆர்வலர்கள் மாணவர்கள் வாழ்வில் தவறாமல் பார்க்க வேண்டிய படம் இது.