Friday, February 4, 2011

நல்ல மனமே சிறந்த வழிகாட்டி

VISIT VADALUR

* உறுதி மிக்க பாறை புயல்காற்றில் அசைவதில்லை.
அதுபோல அறிவாளிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை.

* உடல்நோயைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால்,
மனநோயைத் தாங்க முடியாது. இதைப் போக்க நல்லதையே எண்ண வேண்டும்.
தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.

* அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும்
அறிவுடன் ஒருநாள் வாழ்வதே மேலானது.

* அஞ்ச வேண்டாத விஷயங்களுக்கு அஞ்சுபவனும்,
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருப்பவனும் தீய பாதையில் செல்பவர்களே.

* நல்ல மனமே சிறந்த வழிகாட்டி.
பெற்றோரோ, வேறு எந்த உறவினரோ நமக்கு உதவப் போவதில்லை.

* தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்போடு திரிபவன் முட்டாள்.
அந்த முட்டாள்தனமே அவனை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.

* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே ஒருவன் அறிஞனாகிவிட முடியாது.
தலை நரைத்திருப்பதால் மட்டுமே ஒருவன் முதன்மையானவனாகி விடமுடியாது.

-புத்தர்

No comments:

Post a Comment