Friday, February 4, 2011

தியாகமே சிறந்த வீரம்




*இதயத்தூய்மையோடு வைத்துக்கொண்டு செய்யும் பிரார்த்தனைக்கே இறைவன் செவி சாய்க்கிறான்.

* உள்ளவரோ இறந்தவரோ யாரையும் வணங்காமல் உண்மை என்று வழங்கப்படும் கடவுளிடம்
காணும் பரிபூரணத்தை மட்டும் வணங்குவது சரியான முறையாகும்.

* தவறான குணங்களை அகற்றி மனத்தைத் தூய்மை செய்வதற்குப் பிரார்த்தனையை விட
உதவிகரமான சாதனம் வேறு எதுவும் கிடையாது.

* கடவுளிடம் அசைக்க முடியாத பக்தி கொண்டு பிரார்த்தனை செய்வதும்,
நம் குறைகளைச் சொல்லி முறையிடுவதும் வெறும் மூடநம்பிக்கையல்ல.

* தியாகம் செய்வது தான் சிறந்த வீரம்.

* பலரும் உடம்பின் சக்தியைத் தான் பலம் என்று நம்புகிறார்கள்.
ஆனால் அசைக்கமுடியாத மனவுறுதியே முழுமையான பலமாகும்.

* பூஜையையும், பிரார்த்தனையையும் வெறும் உதட்டளவில் செய்வதால் பயனில்லை.
உள்ளத்தால் செய்யும் போது அப்பிரார்த்தனை இறைவனை சென்றடையும் வலிமை பெறுகிறது.

- காந்திஜி

No comments:

Post a Comment