Sunday, May 8, 2011

பக்தி சிந்தனை சிறந்ததா . பகுத்தறிவு சிந்தனை சிறந்ததா - விடை அளிக்கும் இலவச புத்தகம்

இதற்கு மேல் ஒன்றம் இல்லை என்ற அளவுக்கு , இந்த சொற்பொழிவில் ஜே கிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளிக்கிறார்...

உங்களையே , புத்தகமாக படியுங்கள் என்ற முந்தய பதிவின் தொடர்ச்சி..இதை பெரும்பாலானோர் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இதை விரிவாக பகிர்ந்துகொள்கிறேன் ( அடைப்பு குறிக்குள் இருப்பது சில இடங்களில் சொந்த சரக்கு... சில இடங்களில் , ஜே கிருஷ்ணமுர்த்தி வேறு சந்தரப்பனகளில் சொன்னதை , அதன் பொருத்தம் கருதி அடைப்பு குறியில் கொடுத்து உள்ளேன் ... இரண்டுக்கும் வித்தியாசம் எளிதாக புரியும் என்பதால், வேறு படுத்தி காட்டவில்லை )
***************************************


உங்களையே நீங்கள் ஒரு புத்தகத்தை போல் படித்து கொண்டு இருகிறீர்கள்... உங்கள் சார்பாக நான் படிக்கவில்லை... இருவரும் சேர்ந்து படிக்கிறோம்....

வாழ்வில் ஒழுங்கின்மை, பிளவுண்டு வாழ்தல், இன்னொருவர் கருத்தை ஏற்று ( ஆன்மீக , அரசியல், பகுத்தறிவு , நாத்திகம், வேறு எதாவது சித்தாந்தம் ) வாழ்தல் என்பது பற்றி " புத்தகத்தின் " சென்ற அத்தியாயங்களில் பார்த்தோம்..

எதாவது கருத்துடன், அல்லது செயலுடன் அல்லது சக மனிதருடன் நாம் கொள்ளும் தொடர்பைதான் வாழக்கை என அழைக்கிறோம் ( நமது வாழக்கை வரலாறு என்பது என்ன,,,, சக மனிதருடன் நட்பு, சண்டை, ஒரு கருத்தை ஏற்றல் எதிர்த்தல், - எதாவது ஒன்றுடன் இணைந்ததுதான் நம் வாழ்க்கை. தனியாக வாழ்க்கை என்று ஒன்று இல்லை ..தொடர்புதான் வாழ்க்கை .. ) நாம் ஒட்டு மொத்த மனித குலத்துடன் தொடர்பில் இருக்கிறோம்... நாம் செயல்கள், சிந்தனைகள் உலகை பாதிக்கும்...

நீங்கள் தான் உலகம் ... உலகம் என்று தனியாக எதுவும் இல்லை ....உலகம் என்பது நீங்கள்தான்... ஆக, உங்கள் பொறுப்பு மகத்தானது...

பயம் என்பது பற்றி புத்தகம் என்ன சொல்கிறது என பார்க்கிறோம் ..

வேலை பற்றிய பயம், நோயை பற்றிய பயம் என்று பல பயங்களில்தான் மனித இனம் வாழ்ந்து வருகிறது ..இதை தவிர, இனம் தெரியாத, வெளிப்படையாக தெரியாத பயங்களும் உண்டு ( நமக்கு பயமா ? இதை நம்மால் ஏற்க முடியாமல் இருக்கலாம்... அனால், இந்த பயங்களை மறைக்கத்தான், நமது எல்லா நடவடிக்கைகளும் இருக்கின்றன என்பது கூர்ந்து கவனித்தால் தெரியும் )
பயத்தினால் செய்யபடும் வழிபாடு அர்த்தம் அற்றது ..

பயம் என்பதை பற்றி இன்னும் ஆழமாக பார்ப்போம்... பயம் எப்படி ஏற்படுகிறது?

ஒரு பொய் சொல்லிவிட்டோம்... அது கண்டுபிடிக்க பட்டு விடுமோ என பயம்... செய்ய கூடாத ஒன்றை செய்து தொலைத்து விட்டீர்கள்.. அந்த நினைவு ஏற்படுத்தும் பயம்... வேலை பொய் விடுமோ என்ற பயம்... வாழ்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம்.. .. எத்தனை பயங்கள்

சிறு வயதில் ஏறபட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் வந்து விடுமோ என்ற பயம்..இறப்பை நினைத்து பயம்... இதை எல்லாம் கூர்ந்து கவனித்தால், இந்த புத்தகத்தை இன்னும் படித்தால் ஒன்றுதெரிகிறது..

எண்ணங்கள் தான் பயத்தை உருவாக்குகின்றன.. இப்ப நல்லா இருக்கேன்..ஆனா , வயசான பின் என்ன நடக்குமோ என்று ஓர் எண்ணம் உண்டானால் , அதுதான் பயம்.. என் மனைவி என்னை விட்டு பிரிந்து விட்டால்... ? என் பார்வை திறன் பாதிக்கப்பட்டால்... ?எல்லாமே எண்ணங்கள்தான்..

பயத்தின் ஆதாரம் என்ன ? சிந்தனை மற்றும் காலம்... ( நாளை என்ன நடக்கும் என்பதுதான் பயத்தின் ஆதாரம்... நாளை என்ற காலம் தான் பயத்தை உருவாக்குகிறது )
சிந்தனை என்பது காலத்திற்கு உட்பட்டது... ( நேற்றின் அனுபவம், படிப்பு, - நாளை பற்றிய யோசனை.. இதுதான் சிந்தனை... இதில் பக்தி சிந்தனை , பகுத்தறிவு சிந்தனை என்றெல்லாம் சொல்வது அர்த்தம் அற்றது )

நீங்களே , உங்களை கூர்ந்து கவனித்து , இதை எல்லாம் கவனிக்கிரீகள்... வேறு யாரும் சொல்ல தேவை இல்லை...

சரி, பயம் என்பதே இல்லாமல் இருக்க முடியுமா என நீங்கள் , அதாவது புத்தகத்தின் அடுத்த பக்கம் கேட்கிறது... பயத்தை அழிக்க எதாவது வழி முறைகள் , தியானம் இருக்கிறதா என நீங்கள் கேட்க மாட்டீர்கள் ...வழிமுறைகள் என்று வந்து விட்டாலே அது காலத்தின் பிடியில் வந்து விடுகிறது .. ( ஒரு வாகனத்தை இயக்க, ஒரு சிகிச்சை செய்ய , வழிமுறை உதவும்..சிந்தனை, படிப்பு உதவும்... அனால் )ஒன்றை புரிந்து கொள்ள , எந்த வழிமுறைகளும் உதவாது ..

காலமும், சிந்தனையும்தான் பயத்தின் ஆதாரம் என தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது, பயம் உங்களை விட்டு விலகும்...

நீங்கள் கவனிக்க வேண்டியது காலம் என்பதை பற்றிதான்...

காலம் என்பதுக்கும், சிந்தனை என்பதற்கும் என்ன தொடர்பு என்று நீங்களே உங்களை ஒரு புத்தகத்தை பார்ப்பது போல , ஆழமாக கவனியுங்கள்..

சிந்தனை என்பது என்ன? ஏற்கனவே தெரிந்த ஒன்றில் இருந்து, ஏற்கனவே தெரிந்த இன்னொன்றிக்கு மனம் அசைவதைத்தான் , எண்ணம் /சிந்தனை என அழைக்கிறோம் ( இதன் மூலம் புதிதாக ஒன்றும் அறிய முடியாது.. வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் புதிதாக வருகிறது .. அனால் நாம் , பழயவற்றில் வாழ்கிறோம்... இதுவே முரண்பாடுகளுக்கு காரணம் )

நேற்றைய சிந்தனைகளுடன் இன்றைய தினத்தை சந்திக்கிறோம்... இன்றை, ஒரு அனுபவம் ஆக்கி , அதையும் பழைய பொருள ஆக்குகிறோம்... இதுதான் நம் வாழ்வாக இருக்கறது..

நான் குடிக்றேன்... அனால், ஒரு நாள் விட்டு விடுவேன் என நினைகிறேன்.. காலம் என்னை மாற்றி விடும் என நினைக்றேன்... நேற்று ஒரு கஷ்டத்தை அனுபவித்தேன்.. நாளை மீண்டும் அதுவராது என நம்புக்றேன்..

அதாவது, இறந்த காலத்தில் இருந்து , எதிர்காலத்துக்கு செல்ல, நிகழ் காலத்தை பயன்படுத்துவதுதான், மன ரீதியான காலம் என்பதை புரிந்து கொள்கிறோம் ( கடிகாரம் காட்டும் காலம் என்பது வேறு )

அடுத்த கேள்வி கொஞ்சம் கஷ்டமானது... பொறுமையாக பார்ப்போம்..

மன ரீதியான காலம் என்பதை நிறுத்த முடியுமா ? நமது வாழ்வில் காலம் தான் பெரிய விஷயமாக இருக்கிறது.. எனக்கு தெரியாது... வருங்காலத்தில் தெரிந்து கொள்வேன்..

காலம் நம் மன காயங்களை ஆற்றும்,... 

சரி, இப்பை இருப்பதால் என்ன பிரச்னை..

காலம் என்பது நமது தொடர்பு கொள்ளலை பாதிக்கிறது... புரிது கொள்ளும் தன்மையை பாதிக்கிறது...

ஒரு விஷயத்தை ( ஒருவர கஷ்டத்தை ) உடனடியாக புரிந்து கொண்டால்தான் உண்டு... கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்வேன் என்பது அபத்தம் ( இப்ப அனுபவிக்காம எப்ப அனுபவிப்பது,,, சின்ன வயசுல ஜாலிய இருந்துட்டு, வயசானபின் மாறி விடுவேன் என சொன்னால், வாழ்வை பிரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் )

சிந்தனை , காலம் என்பது எந்த பிரச்சினைக்கும் தீர்வை தராது ( ஒரு பம்ப் வேலை செய்யவில்லை என்றால், அதே போல வேறு பிரச்சினையை சமாளித்த அனுபவம் கை கொடுக்கும்... யோசித்து பம்ப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.. காலம் கை கொடுத்தது,,,, அதாவது நேற்றைய அனுபவம் கை கொடுத்தது )

தொழில் நுட்ப பிரச்சினைகளுக்கு, சிந்தனை மற்றும் காலம் தீர்வு சொல்லலாம்... அனால், உங்கள் மனைவியை புரிந்து கொள்ள சிந்தனை உதவாது,..,, உங்கள் மனைவியுடன் ஏற்படும் பிரசினைக்கு காலம் தீர்வு சொல்லாது...

சிந்தனையை எப்படி நிரிதுவது? மன ரீதியான காலம் என்பதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என யாரிடமாவது கேட்டால், அவர்கல், இதை பற்றி நன்றாக உரை ஆற்ற முடியும்... அனால், அது உங்களுக்கு உதவாது...

காலத்திற்கு இடையேயான சிந்தனை ஓட்டம், நிறுத்தப்பட முடியுமா, என்பதை நீங்களே உங்களை கேட்பதுதான், உண்மையான தியானம்..

நான் சொல்கிறேன்... சிந்தனை ஓட்டத்தை நிறுத்த முடியும்... நிருத்தி இருக்கிறேன்... அனால், இதை நான் சொல்கிறேன்- உங்கள் புத்தகம் சொல்லவில்லை...

நான் சொல்வதை நம்பினால், அது உங்க்களுக்கு உதவாது... நீங்களே உணர வேண்டும் ( யாரையும் பின் பற்றாதீர்கள் என சொல்லும் ஜே கிருஷ்ணமூர்த்தி, தன்னை கூட நம்ப வேண்டாம் என்கிறார் )

எனவே நீங்களே உங்களை கவனியுங்கள்... சிந்தனை, கால ஓட்டம், இதெல்லாம் உங்களை , உங்கள் தொடர்பு கொள்ளும் தன்மையை எப்படி பாதிக்கிறது என பாருங்கள்..

காலம் சார்ந்து செயல்பதும் உங்கள் மனம , மூளை, முற்றில் வேறு விதமாக செயல்பட முடியுமா என பாருங்கள்,,,, 

இதற்க்கு மிக தீவிரமான கவனம் தேவை,,, 

நீங்கள் என்ற புத்தகத்தை மிக உன்னிப்பாக கவனித்து படியுங்கள்.... 

நான் என்ற விஷயத்தை தீர்க்கமாக கவனியுங்கள் 


( வேறு யாரும் உங்களுக்காக படிக்க முடியாது... வேறு யாருடைய புத்தகத்தையும் நீங்கள் படிக்க முடியாது பெரியார் அவர்கள் படித்த புத்தகம் , கடவுள் இல்லை என சொல்லி இருக்க கூடும்... ராமானுஜர் அல்லது ஆழ்வார்கள் , நாயன்மார்கள் படித்த புத்தகம் கடவுள் இருக்கிறர் என சொல்லி இருக்க கூடும்.. 

ஒரு தரப்பு உண்மை சொல்கிறது..ஒரு தரப்பு உண்மை சொல்கிறது என்பது அல்ல... அவரவர்கள் படித்ததை , அவரரவர் உண்மையாக தெரிந்து கொண்டதைத்தான் அவரவர்கள் சொல்கிறார்கள்,,, இதில் தவறில்லை... ஆனால், அது நம் படிப்பு ஆகாது... அவர்கள் சொன்னதை திருப்பி சொல்வது அவர்களுக்கு பெருமை சேர்க்காது ( கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை ) ..

நம் புத்தகத்தை நாம் படிப்போம்.. அது என்ன சொல்கிறது என்ன பார்ப்போம் ... )

1 comment: