Thursday, January 27, 2011

சந்தோஷ சாதனை வாழ்வுக்கு 50 முறைகள்


- பேராசிரியர் டாக்டர். இரா. மோகன்குமார்.
தெருவில் “Keep your Clean & Beauty” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைப்பார்த்த நாட்டுப்பற்று மிகுந்த சர்தார்ஜி சுற்றுச்சூழல் கெட்டுப்போய்விடும் என்ற நல்லெண்ணத்தில் தன் வீட்டில் வரும் குப்பை, கூளங்கள், வீணான உணவுப் பொருட் களை மாநகராட்சி குப்பைத் தொட்டியில் போடாமல், தன் வீட்டு அறை ஒன்றிலேயே சேகரித்து வந்தார். இப்போது வீட்டின் உள் சூழல் கெட்டுப் போய்விட்டது. நாற்றம். துர்நாற்றம்.
தன் தவறை உணராத சர்தார்ஜி வீட்டின் வெளிப்புறம் நாற்றத்தினை உருவாக்கும் அழுகிய பொருட்கள் ஏதேனும் காணப்படுகிறதா? என தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்.
சர்தார்ஜியின் தவறை சுட்டிகாட்ட நினைத்த அவர் மனைவியின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது. சர்தார்ஜி தொடர்ந்து அதே தவறை (குப்பையை வீட்டிற் குள் பாதுகாக்கும் ) செய்து வந்தார்.
இறுதியில் மனைவி, மக்கள் அவரை விட்டு பிரிந்து சென்றனர். பின் பக்கத்து வீட்டி னரும் உடல் நலன் கருதி வீடுகளை காலி செய்து பாதுகாப்பான பகுதிகளுக்கு குடி சென்று விட்டனர்.
சர்தார்ஜி குடும்பத்தார், உறவினர், நண்பர்களை இழந்தாலும், தன் செயலை மாற்றிக் கொள்ளத் தயாராகவில்லை.
சர்தார்ஜியை போன்றே நம்மில் பலரும் அவ்வப்போது ஏற்படும் சிறு மற்றும் பெரிய பிரச்சனைகள், தோல்விகள், அவமானங்கள், எதிர்மறை அனுபவங்கள், சண்டை சச்சரவு களால் மனதில் உருவாகும் எதிர்மறை எண்ணங் கள், நெருடல்கள், ஆத்திரம், கோபம், வன்மம், பகை, போட்டி மனப்பான்மை, பழிவாங்கும் எண்ணம், போன்ற குப்பைகளை அவ்வப்போது மனதிலிருந்து அகற்றி சுத்தப்படுத்தாமல், மனதை மாசுபடுத்த அனுமதித்து விடுகிறோம். விளைவு மனமென்னும் கோவில், தீய எண்ணங்களின் கூடாரமாகவும், பிறப்பிடமாகவும் மாறுகிறது. பயன்மிக்க, உயர்ந்த கருத்துக்கள், திட்டங்கள் மற்றும் நேர்மறை செயல்கள், (அன்பு, கருணை, உதவி, உழைப்பு, மன்னிப்பு, மாண்பு ) உருவாக வேண்டிய மனம் அமைதியின்மை, வெறுப்பு, பழிவாங்குதல், தோல்வி மனப்பான்மை, வெறுமை, அவமானம், துக்கம், போன்ற எதிர்மறை இயல்புகளின் புகலிடமாக மாறி விடுகின்றது. மனிதன் இத்தகைய நிலைதான் இன்றைய சமுதாயத்தின் பல்வேறு எதிர்மறை செயல்களான கொலை, தற்கொலை, விவா கரத்து, மனநிலை பாதிப்பு, அடிதடி, கற்பழிப்பு, கொள்ளை மற்றும் பல விபத்துக்களுக்கான அடிப்படை காரணமாக அமைகின்றது. அதை விட நம் சாதனை வாழ்விற்கு தேவையான குடும்ப, சமூக, நட்பு வட்ட ஆதரவு தளம் குறைய துவங்குகின்றது. சந்தோஷம், சாதனை கனவுகள், சிறந்து விளங்குகின்றன. ஆகவே நம் வாழ்வில் என்ன என்ன பிரச்சனைகள், அவமானங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், காயங்கள், ஏற்பட்டி ருந்தாலும் அவை யார் காரணமாக வந்திருந் தாலும், நாம் அவ்வப்போதே அந்த எதிர்மறை அனுபவங்கள் காரணமாக நம் மனதில் ஏற்படும் பகையுணர்வு, பழிவாங்கும் உணர்வு, துக்கம், கோபம், மற்றும் அவமானம் போன்ற அசுத்தங் களை சுத்தப்படுத்த முயற்சி எடுப்பது நல்லது.
மனதின் மாசை அகற்றி, புத்துணர்வு உருவாக்க, அவ்வப்போது நேரம் ஒதுக்குவது நல்லது. அப்படி மனதில் ஏற்படும் காயங்களை ஆறவைத்துவிட்டால், பிற்காலத்தில் பெரிய மனநோய்கள் வருவதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். எதிர்மறை தாக்கங்களையும், விளைவுகளையும் தடுத்து நிறுத்த முடியும். குடும்ப உறவுகள், நட்பு வட்டம் குறைவதை ஆதரவு தனம் சுருங்குவதை கட்டுப்படுத்த முடியும், நம் சந்தோஷ, சாதனை வாழ்வு சாத்தியமாகும்.
மனதை சுத்தமாக வைத்திருப்பது எப்படி
நண்பர் ஒருவர் மகிழ்ச்சியான ஒரு கொண்டாட்டம் இருக்கிறது. வாருங்கள் என்று அழைப்புவிடுத்தார். வீட்டிற்குச் சென்றேன். வீடே திருவிழா கோலம்தான் சந்தோஷத் திற்கான காரணத்தை தெரிந்தால், ஆச்சரியப் பட்டு போவீர்கள்.
நண்பர் குடும்பத்திற்கும், அவர் உறவினர் குடும்பத்திற்கும் இடையே நிகழ்ந்து வந்த அடிதடி, போட்டி, பொறாமை, கொலை, பனிப்போர் போன்றவற்றை பேசித்தீர்த்து மீண்டும் நல்லுறவை உருவாக்கியதைக் கொண் டாடும் கொண்டாட்டம் தான் அன்றைய சந்தோஷ நிகழ்வு,
தலைமுறை, தலைமுறையாக இருந்து வந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை எடுத்த நண்பர் பேச்சு வார்த்தையின் போது பிரச்சனைக்குரிய 1 ஏக்கர் நிலத்தில், 70 சென்ட், நிலத்தை மனமுவந்து எதிர்தரப் பினருக்கு விட்டுக் கொடுத்ததனாலேயே பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இதைதான்
விட்டுக் கொடுப்பவர்கள்
கெட்டுப் போவதில்லை.

கெட்டுப் போபவர்கள்
விட்டுக் கொடுப்பதில்லை.

என்ற பொன் மொழி உணர்த்துகிறது.
இப்போது இரு குடும்பத்தினரும் பகைமை உணர்வை மறந்ததனால்

(அ) மன அமைதியோடு வாழ முடிகின்றது.
(ஆ) மன அமைதியோடு தொடர்புடைய உடல் நலம் உருவாகின்றது.
(இ) அவர்கள் சக்தி, நேரம் மற்றும் திறன்கள் சண்டை சச்சரவுகளில் வீணாகிக் கொண்டிருந்தது. தடுத்து நிறுத்தப்பட்டு, பயனுள்ள வகையில் பயன்படுத்த துவங்கப்பட்டிருக்கின்றது.
(ஈ) குடும்பங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை யால் சமூகசூழல் செம்மைப்படுத்தப் பட்டுள்ளது.
(உ) இரண்டு குடும்பத்தினருக்கு மட்டுமல்ல சமூதாயத்தினருக்கும் நாளை என்ன பிரச்சனை வரப்போகிறதோ என்ற பயஉணர்வு வேரறுக்கப்பட்டுவிட்டது.
(ஊ) மன்னிக்கும் தன்மை நம்மிடம் தன்னம் பிக்கையை, நம்பிக்கையை அதிகரிக்கச் செய்து நம் ஆளுமையை வளப்படுத்து கின்றது.
(எ) பகைமையை மறந்து, நட்புறவை வளர்ப் பதன் மூலம் அன்பு நிலை நாட்டப் படுகின்றது. உறவுகள் மலர்கின்றது.
மன்னிக்கும் செயலினை உளவியல் வல்லுநர்கள் மனக்குளியல் அல்லது உணர்வு விடுதலை அல்லது எண்ண விடுதலை என்று கூறுகிறார்கள்.
ஏனென்றால் பழிவாங்கும் எண்ணம், கோபம், வெறுப்பு ஆகிய தன்மைகளுடன் வாழ்ந்தால், அவை நம்மை ஆள்கின்றது. ஆட்டுவிக்கின்றது.
ஆனால் மன்னிக்கும் மாண்புடன், தீமை செய்தவருக்கு மன்னிப்பு அருள்வதனால் நாம் நம் உணர்வுகளை ஆட்சி செய்கின்றோம். நம் விருப்பப்படி நம்மை, நம் எண்ணங்களை, செயல்களை நல்ல திசைகளில், வாழ்வின் உன்னத குறிக்கோளை நோக்கி பயன்படுத்துகிறோம்.
சாதனைகள் சாத்தியமாகிறது. சந்தோஷம் சகஜமாகின்றது. ஆகவே
மன்னிப்போம், மறப்போம்,
சரித்திரம் படைபோம்.
10. இது பிரார்த்தனை நேரம்
கடவுள் இருக்கின்றாரா? இல்லையா ? என்ற கேள்வி அவ்வப்போது பலரால் பல பகுதிகளில் எழுப்பப்பட்டு வந்த போதும், இன்றளவும் பெருவாரீயான மக்கள் கடவுள் நம்பிக்கையுடன், தொடர்ந்தோ, அவசியப்படும் போதோ, அவசரங்களுக் காகவோ, இறை வழிபாடுகள், பிராத்தனைகளில், ஈடுபட்டு வருவது கண்கூடு.
இறைவழிபாடு, ஜெபம், தரிசனம், பிரார்த் தனை, பூஜை, தியானம், கூட்டுப் பிரார்த்தனை , அர்ச்சனை, ஓதுதல் என எத்தனையோ பெயர் களில், வழிகளில் இறைவனை துதிக்கின்றனர், வணங்குகின்றனர், வேண்டுதல்களை சமர்ப்பிக் கின்றனர்.
பிரார்த்தனை பலனளிக்குமா?
இறைவனை பற்றியும், பிராத்தனையின் பலன்களை பற்றியும், இருவேறு கருத்துக்கள் இருந்து வந்தாலும், அனுபவபூர்வமாகவும், அறிவியல் ஆய்வுகள் மூலமாகவும், ஆன்மீக அனுபவ பகிர்வுகள் மூலமாகவும், இறைவழிபாடு, வேண்டுதல், பிரார்த்தனை, கூட்டுப்பிரார்த்தனை, துôரதேச பிரார்த்தனை (Distant Prayer) அடுத்தவர் களின் பிரார்த்தனை (Intercessory Prayer) ஆகிய வற்றை நம்பிக்கையோடு பயன்படுத்துபவர்கள் அளப்பரிய பலன்களை அனுபவித்து வருவதற் கான ஆதாரங்களைக் காண முடிகின்றது.
பிரார்த்தனை எப்படி பலனளிக்கிறது?
பிரார்த்தனை அல்லது ஜெபம் அல்லது இறைவழிபாடு வழங்கும் பலன் ஆன்மீக பலம், மதம் என்பது ஆன்மீக பலத்தை அடைய நாம் பயன்படுத்தும் ஒரு பாதை மட்டுமே. ஆன்மீக பலம் என்பது இறைவனிடம், பரம்பொருளிடம், நாம் கொள்ளும் நம்பிக்கையில் விளைவாக கிடைக்கும் அருள் பலனே ஆகும். இறை நம்பிக்கை மூலம் கிடைக்கும் ஆன்மீக பலம் நமக்கு,
(அ) நம் மீதே நம்பிக்கையை உருவாக்குகின்றது. எத்தகைய சூழலிலும் நாம் பயப்படத் தேவையில்லை. இறைசக்தி என்னை காத்தருளும் என்ற அபார நம்பிக்கையை வழங்குகிறது. ஆன்மீக பலம் மூலம் கிடைக்கும் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை உடையவர்கள், எத்தகைய நோய்கள், துன்பங்கள் அல்லது தோல்விகள் ஏற்பட்டாலும், எளிதில் மீண்டு சகஜ நிலைக்கு வந்து விடுவதாக பல்வேறு உளவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்து கின்றன. ஆகவே பிரார்த்தனை, இறைவழிபாடு மற்றும் இறை நம்பிக்கை மூலம் கிடைக்கும் ஆன்மீக சக்தி நாம் எத்தகைய எதிர்மறை சூழ லிலும் துணிவுடனும், சந்தோஷ மனநிலை யுடனும் சாதனை வாழ்வு வாழ உதவுகின்றது.
(ஆ) துன்பங்கள் அகலும், நன்மைகள்
இறை நம்பிக்கை மற்றும் தொடர்ந்த பிரார்த்தனையுடன் வாழ்ந்து வருபவர்களிடம், தவறுகள், அநியாயங்கள், துரோகம், ஏமாற்றுதல், பொறாமை போன்ற எதிர்மறை குணநலன்களின் தாக்கம் குறைவாக காணப்படும். நாம் தீமைகள் செய்யாதவரை நமக்கு தீங்குகள் விளையும், வாய்ப்புகள் மிக மிக குறைவே. அடுத்த நிலையில் இறை அன்பு உடையவர்கள் அடுத்தவருக்கு முடிந்த அளவு நன்மைகள் செய்து வருவார்கள். பலன் அவர்களுக்கும் நன்மைகள் அதிகமாக விளைந்து வரும்.
(இ) இறை நம்பிக்கை ஆணவத்தை
அடக்கி வைக்க உதவுகின்றது.
ஆணவமற்ற ஆளுமை அன்பு, பண்பு, அமைதி, பாசம், எளிமை, மனிதாபிமானம் உள்ளிட்ட சந்தோஷ சாதனை, வாழ்விற்கு தேவை யான அனைத்து குணநலன்களுக்கும் அடிப்படை யாகின்றது. இவை அனைத்திற்கும் மேலாக, பிரார்த்தனையோடு கூடிய இறைநம்பிக்கை.
1. உடல் நலம் 2. மனநலம் 3. தன்னம்பிக்கை 4. எண்ணத்துôய்மை 5. நட்பு வட்டம் 6. பாது காப்பு உணர்வு
என எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்கு கிறது. ஆகவே கடவுள் நம்பிக்கை, இறைவழிபாடு மற்றும் பிரார்த்தனை நம் வாழ்வில் சந்தோஷத் தையும், சாதனைகளையும் வாரி வழங்கும் அட்சய பாத்திரம் என்பதை உணருவோம். சந்தோஷ சாதனை சரித்திரத்தை எழுதத் துவங்குவோம்.

No comments:

Post a Comment