Thursday, February 10, 2011

ஆசையை அடக்க முடியுமா?


               ஆசை 

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?
ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது.
சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச்செல்கிறது.
அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது.
`வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. `போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.
ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்துஒருவன் கைக்கு அதுகிடைத்துவிட்டால்வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்றுதேடிக்கொண்டே போகிறான்.
ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களைமனது வளர்த்துக் கொள்கிறது.
ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோஅந்தக் கட்டத்தில்சுயதரிசனம் ஆரம்பமாகிறது.
சுயதரிசனம் பூர்த்தியானவுடன்ஆண்டவன் தரிசனம் கண்ணுக்குத்தெரிகிறது.
ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?
லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும்மனப்பக்குவம் இருக்கிறது.
என் ஆசை எப்படி வளர்ந்ததென்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.
சிறு வயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபதுரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா?” என்றுஏங்கினேன்.
கொஞ்ச நாளில் கிடைத்தது.
மாதம் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்திலே ஒரு பத்திரிகையில்வேலை கிடைத்தது.
ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.
மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.
அதுவும் கிடைத்ததுவேறொரு பத்திரிகையில்.
பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று.
அதுவும் கிடைத்தது.
மனது ஐநூறுக்குத் தாவிற்று.
அது ஆயிரமாக வளர்ந்தது.
ஈராயிரமாகப் பெருகிற்று.
யாவும் கிடைத்தன.
இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும்போலிருக்கிறது!
எந்தக் கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.
`இவ்வளவு போதும்’ என்று எண்ணுகிற நெஞ்சு, `அவ்வளவுகிடைத்ததும்அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதேஏன்?
அதுதான் இறைவன் லீலை!
ஆசைகள் அற்ற இடத்தில்குற்றங்கள் அற்றுப் போகின்றன.
குற்றங்களும் பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்குஅனுபவங்கள் இல்லாமல் போய்விடுகின்றன.
அனுபவங்கள் இல்லையென்றால்நன்மை தீமைகளைக்கண்டுபிடிக்க முடியாது.
ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகஇறைவன் ஆசையைத்தூண்டிவிடுகிறான்.

ஆசையை மூன்றுவிதமாகப் பிரிக்கிறது இந்து மதம்.
மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!
மண்ணாசை வளர்ந்துவிட்டால்கொலை விழுகிறது.
பொன்னாசை வளர்ந்துவிட்டால்களவு நடக்கிறது.
பெண்ணாசை வளர்ந்துவிட்டால்பாபம் நிகழ்கிறது.
இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.
ஆகவேதான்பற்றற்ற வாழ்க்கையை இந்துமதம் போதித்தது.
பற்றற்று வாழ்வதென்றால்எல்லாவற்றையும் விட்டுவிட்டுஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!
இருப்பது போதும்வருவது வரட்டும்போவது போகட்டும்;மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமல்இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.
ஆசைதீமைக்கு அடிப்படையாக இல்லாதவரைஅந்த ஆசைவாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.
நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன்.
அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக்குற்றவாளிகளே.
மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கிஇருக்கிறது.
சிறைச்சாலையில் இருந்துகொண்டுஅவன் “முருகாமுருகா!”என்று கதறுகிறான்.
ஆம்அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.
அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வைநிலையற்ற பொருள்
களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” என்பது திருக்குறள்.
ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டியதில்லைஅப்படிஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?
அதனால்தான் `தாமரை இலைத் தண்ணீர் போல்’ என்று போதித்ததுஇந்து மதம்.
நேரிய வழியில் ஆசைகள் வளரலாம்ஆனால் அதில் லாபமும்குறைவுபாபமும் குறைவு.
ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய்மட்டுமே கிடைத்தால் அந்த ஐநூறு உனக்குப் பணமாகத் தெரியாது.
இருநூறு எதிர்பார்த்து உனக்கு ஐநூறு கிடைத்தால்நிம்மதிவந்துவிடுகிறது.
எதிர்பார்ப்பதைக் குறைத்துக் கொள்வருவது மனதை நிறையவைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.
எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும்இன்னொருபெண்ணை ஆசையோடு பார்க்கிறானேஏன்?
லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன் மேலும் ஓர்ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதென்றால் ஓடுகிறானேஏன்?
அது ஆசை போட்ட சாலை.
அவன் பயணம் அவன் கையிலில்லைஆசையின் கையில்இருக்கிறது.
போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்;அப்போது அவனுக்குத் தெய்வ ஞாபகம் வருகிறது.
அனுபவங்கள் இல்லாமல்அறிவின் மூலமே தெய்வத்தைக்கண்டுகொள்ளும்படி போதிப்பதுதான் இந்துமதத் தத்துவம்.
`பொறாமைகோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்தகுழந்தைகள்தான்.
வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப்பார்த்துஅந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்யஅந்தக்காரணங்களைச் சுட்டிக் காட்டிஉனது பயணத்தை ஒழுங்குபடுத்தும்வேலையை இந்துமதம் மேற்கொண்டிருக்கிறது.
இந்துமதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்லஅது வாழவிரும்புகிறவர்கள்வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.
வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும்நீதிகளையே போதிக்கிறது.
அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கே அல்லா மல் தன்னைவளர்த்துக் கொள்வதற்காக அல்ல.
உலகத்தில் எங்கும் நிர்பந்தமாகத் திணிக்கப்படாத மதம்இந்து மதம்.
உன் உள்ளம் நிர்மலமாகவெண்மையாகதூய்மையாக இருக்கிறதுஎன்பதற்கு அடையாளமாகவே அது `திருநீறு’ பூசச் சொல்லுகிறது.
உன் உடம்புநோய் நொடியின்றி ரத்தம் சுத்தமாக இருக்கிறதுஎன்பதற்காகவே, `குங்குமம்’ வைக்கச் சொல்கிறது.
`இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது `மாங்கல்யம்சூட்டுகிறது.
தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒரு பெண் கிளறி விடக்கூடாது என்பதற்காவேஅவளைத் `தலை குனிந்து’ நடக்கச்சொல்கிறது.
யாராவது ஆடவன் தன்னை உற்று நோக்குகிறான் என்பதைக்கண்டால்இந்தப் பெண்கள் மார்பகத்து ஆடையை இழுத்து மூடிக்கொள்கிறார்களேஏன்?
ஏற்கெனவே திருத்தமாக உள்ள ஆடையை மேலும்திருத்துகிறார்களேஏன்?
எந்தவொரு `கவர்ச்சியும் ஆடவனுடைய ஆசையைத் தூண்டிவிடக்கூடாது என்பதால்.
ஆம்ஆடவன் மனது சலனங்களுக்கும்சபலங்களுக்கும் ஆட்பட்டது.
கோவிலிலே தெய்வ தரிசனம் செய்யும்போது கூட கண்கோதையர்பால் சாய்கிறது.
அதை மீட்க முடியாத பலவீனனுக்குஅவள் சிரித்துவிட்டால் எரியும்நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது.
பொம்பளை சிரிச்சா போச்சுபுகையிலை விரிச்சாப் போச்சு” என்பதுஇந்துக்கள் பழமொழி.
கூடுமானவரை மனிதனைக் குற்றங்களில் இருந்து மீட்பதற்குதார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம்.
அந்தக் குற்றங்களில் இருந்து விடுபட்டவனுக்கே நிம்மதிகிடைக்கிறது.
அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள்தோன்றின.
இன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியரைத் தெரியும்ஷெல்லியைத்தெரியும்ஜேம்ஸ்பாண்ட் தெரியும்கெட்டுப் போன பின்புதான்,அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.
ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண பரமஹம்சரின்உபதேசங்களைப் படிப்பானானால்இந்துமதம் என்பது வெறும்`சாமியார் மடம்’ என்ற எண்ணம் விலகிவிடும்.
நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள்ளஉன் தாய்வடிவில் துணை வருவது இந்துமதம்.
ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்?
ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன்அதனுள்விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல்உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களில்அமிழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும்” என்கிறார்.
அவிழ்த்து விடப்பட்ட யானைமரங்களையும் செடி கொடிகளையும்வேரோடு பிடுங்கிப் போடுகிறதுஆனால் அதன் பாகன் அங்குசத்தால்அதன் தலையில் குத்தியதும்அது சாந்தமாகி விடுகிறது.”
அதுபோலஅடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது.”
விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும்சாந்தமாகிவிடுகிறதுஎன்றார்.                                                     அடக்கியாள்வதன் பெயரே வைராக்கியம்.
                                                கண்ணதாசனின் 

No comments:

Post a Comment