Tuesday, February 15, 2011

J Krishnamurti Diary - 1


ஜே.கே அவர்களின் நாட்குறிப்பினை படித்துக் கொண்டிருந்தேன். "Imagination and illusion distort clear observation.Illusion will always exist..." என்று குறிப்பிட்டிருந்தார். மனம் எப்போது எந்த கற்பனைகளும் சிந்தனைகளும் இல்லாமல் இருக்கின்றதோ அப்போதுதான் அமைதியும் தெளிவும் கிடைக்கும் என்கின்றார்.

மனது எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கின்றது. பல வேளைகளில் கற்பனைகள் தொடங்கிவிடுகின்றன. இந்த கற்பனைகளுக்கு எல்லையே இல்லாதவாறு பரந்து வளர்ந்து கொண்டே போகின்றன. நிஜத்தில் நடக்காததையெல்லாம் மனது கற்பனை செய்கின்றது. இப்படி நடந்தால் நன்றாக இருக்குமே எனக் கற்பனை செய்து மனம் மகிழ்கின்றது. இது சரியா தப்பா என்பது கேள்வியல்ல.. இதனால் மனம் அமைதி அடைகின்றதா இல்லையா என்பதே எனக்கு முக்கியமான கேள்வியாகப் படுகின்றது.

ஒரு வேலையில் மாட்டிக் கொண்டு அந்தப் பிரச்சனையில் மூழ்கிக் கிடக்கும் போது கற்பனைகளுக்கு இடமில்லாமல் போய்விடுகின்றது. செய்வதற்கு வேலை இல்லாமல் தனியாக ஓய்வாக இருக்கும் போதுதான் நாம் மனத்தோடு அதன் ஓட்டத்தோடு கலந்து சம்பாஷித்துக் கொண்டிருப்பதை உணர முடிகின்றது. எனது சிந்தனைகளை சில நேரம் கவனித்துக் கொண்டே வந்தேன். பல விஷயங்களை அதுவும் நான் விரும்பும் பல விஷயங்களைப் பற்றி மனம் சிந்தித்துக் கொண்டே செல்வதைக் காண முடிகின்றது. மனதில் ஒரு கலந்துரையாடல் நடக்கின்றது. முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மனதின் இந்த சிந்தனை ஓட்டம் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டும் இருக்கின்றது. மனதின் சிந்தனைகளைப் பொருத்து எனது உணர்வுகளும் கவலை, மகிழ்ச்சி, வேதனை எனப் பலவாராக மாற்றம் கான்பதை உணர முடிகின்றது. ஒரு சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும் போது மூச்சு முழுதாக ஓடுவதில்லை. அறை குறையாக மூச்சு இயங்குகின்றது. அந்த சிந்தனையை நிறுத்தி விட்டுப் பார்த்தால் நல்ல ஆழமான deepth breath என்பது கிடைக்கின்றது. மனதை அமைத்டிப் படுத்துவது என்பது அசாதாரண ஒரு விஷயம்தான்..!

More Info :http://ksuba.blogspot.com/2003/09/jks-diary-1.html

No comments:

Post a Comment