Friday, February 4, 2011

ஒரு ஆள் ஜென் துறவியிடம் வந்தார்.

--------கோபம்---------------

"சுவாமி, எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. அந்த நேரத்தில் என்ன செய்கிறேன் என்பதே தெரிவதில்லை. சில நேரம் வீட்டுக் கண்ணாடிப் பொருட்களையும் கூட உடைத்துப் போட்டு இருக்கிறேன். வீட்டிலிருப்பவர்களிடமும் வெகு கடுமையாக நடந்துகொள்கிறேன். சில நேரம் தவறு என்னுடையதாகவும், சில நேரம் மற்றவர்களுடையதாகவும் இருக்கிறது. இந்த மாதிரியான என் நிலையினால் பல நன்பர்களையும் இழந்தும், கெட்டபேரையும் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறேன். இதற்கு தாங்கள் தான் ஏதாவது வழி சொல்லவேண்டும்".

துறவி ஒரு மரப்பலகையும் கூடவே ஒரு பை நிறைய ஆணிகளையும் கொடுத்து சொன்னார், "எப்போதெல்லாம் உங்களுக்கு கோபம் வருகிறதோ.. அப்போதெல்லாம் இந்தப் பலகையில் ஒரு ஆணி அடித்து வையுங்கள். பிறகு செய்தது தவறென்றோ அல்லது இன்னும் தன்மையாகப் பேசி இருக்கலாம் என்றோ நி னைப்பீராயின் அந்த நேரத்தில் அடிக்கப்பட்ட ஆணியைப் பிடுங்கி எடுங்கள். ஒரு மாதம் கழித்து என்னிடம் வாருங்கள்".

ஒரு மாதம் கழித்து அந்த மனிதர் வந்தார். பலகையில் நிறைய ஆணி அறையப் பட்ட தடங்களும், சில ஆணிகளும் மிச்சமிருந்தது.

"சுவாமி, இப்போது கோபம் மட்டுப்பட்டு இருக்கிறது, பாருங்கள் எத்தனை தடவை தவறுணர்ந்து ஆணிகளைப் பிடுங்கி இருக்கிறேன்."

ஜென் ஆசிரியர் சொன்னார்... "அதெல்லாம் சரி நான் உன்னிடம் பலகையைத் தரும்போது எப்படி இருந்ததோ அப்படியே தா, இதில் பார் எத்தனை காயங்களும் ஓட்டைகளும் ஏற்பட்டிருக்கிறது".

No comments:

Post a Comment