Tuesday, February 15, 2011

துறந்தோர் உள்ளப் பெரும் பயன்:


ஆசை நீத்தவர்க்கே வீடு தருபவன் இறைவன்பற்றற்றோர் சேர் பரம்பொருளைப் பற்றுற்றார் சேர இயலாதுஇதனால்தான் ஞானசம்பந்தர் "அற்றவர்க்கு அற்ற சிவன்" (தி.3 .120 பா.2) என்றார்பற்றற்றவரேஇயல்பாகவேபற்றற்ற பரமனைச் சேரலாம் என்றார்பற்று அறுவதற்கே பரமேசுவரன் நமக்குப் பல பிறப்பைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான்.
இக்கருத்தையே அரியானை என்னும் பதிக ஐந்தாம் பாடலி லும்ஏழாம் பாடலிலும் குறிக்கின்றார்அருந்துணையை என்னும் ஐந் தாம் பாடலில், "மடவாரோடும் பொருந்தணை மேல்வரும் பயனைப் போக மாற்றிப் பொது நீக்கித்தனை நினையவல்லோர்க்கு என்றும் பெருந்துணையை" (தி.6 .1 பா.5) என்றருள்கிறார்வரும் பயனை என்னும் ஏழாம் பாடலில், "சுரும்பமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில்துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் யார்?அவர் உள் ளத்தில் பெரும்பயனாய்ப் பிரகாசிப்பவன் பெரும்பற்றப் புலியூர்ப் பிரான்" (தி.6 .1 பா.7) என்கிறார்.
இவ்விரு பாடல்களிலும்பெண்ணாசை துறந்தார்க்கே பெரு மான் வீடளிப்பான்பெரும்பயனாயிருப்பான்பெருந் துணையாயி ருப்பான் என்பது தெளிவாகிறது.
எல்லா ஆசைகளும்மண்ணாசைபெண்ணாசைபொன் னாசை (பொருள்என்ற மூன்றில் அடங்கும்இவற்றுள்ளும் மற்ற இரு ஆசைகளைக் கடந்தாலும் பெண்ணாசை கடத்தற்கரியது என்பத னால்தான்அதனைக்கடந்தவர்கட்குப் பெரும்பயனாய் உள்ளான் இறைவன் என்கிறார் அப்பா.
கண்ணால் காணும் இன்பம்காதால் கேட்கும் இன்பம்நாவால் சுவைக்கும் இன்பம்மூக்கால் முகரும் இன்பம்உடலால் உற்றறியும் ஊற்றின்பம்இவ்வைந்தும் சிற்றின்பமேசிறுபொழுது இன்பம் பயப்பதால் சிற்றின்பம்என்றனர்இவ்வைம்புல இன்பமும் ஒரு காலத்து ஓரிடத்தே நிகழ்தல் பெண்ணிடத்தேயாகலின்பெண் இன்பத்தைத் தலைமை பற்றிச் சிற்றின்பம் என்று பேசி வருகின்றனர். "கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும்ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள" (குறள், 1101என்பது வள்ளுவம்தலைமை பற்றிய முடிவான ஆசையைத் துறந்த பெரியோர்க்கே பெரும்பயனாகப் பெருமான் விளங்குகின்றான் என்பதை இப்பாடல் பகுதிகளால்விளக்கியுள்ளார்எனவே எந்த வகை ஆசையும் அற்றவர்க்கே வீடு பேறு உண்டாம் என்பதே இதனால் உணர்த்தப்படும் உண்மை என்பதைத் தெளிவோமாக.
ஆசை அறுவது நமது முயற்சியால் ஆகாதுஇறைவன் அருளைத் துணையாகப் பற்றினால் அறும்அதற்குத் துணை செய்கி றார் தருமைக் குருமுதல்வர் குருஞானசம்பந்தர்அப்பாடலை நாளும் ஓதுவோம்நலம் பெறுவோம்.அப்பாடல் வருமாறு:
வந்த பொருளாசை மண்ணாசை பெண்ணாசை
இந்தவகை ஆசையெல்லாம் என் மனதில் - வந்தும் இனிச்
சேராமல் வாழ நினைகண்டாய் தென்கூடல்

No comments:

Post a Comment