Thursday, February 17, 2011

நிம்மதி உண்டு!



 
இனி ஒரு பயமில்லை ! 
தைரியமுண்டு !
இனி ஒரு தடையில்லை !
வழியுண்டு !
இனி ஒரு குழப்பமில்லை !
தெளிவுண்டு !
இனி ஒரு பலவீனமில்லை !
பலமுண்டு ! 
இனி ஒரு பிரச்சினையில்லை !
தீர்வு உண்டு ! 
இனி ஒரு பொய்யில்லை !
நிஜமுண்டு ! 
இனி ஒரு அவசரமில்லை !
நிதானமுண்டு !
இனி ஒரு தொந்தரவில்லை !
முயற்சியுண்டு !
இனி ஒரு வியாதியில்லை ! 
ஆரோக்கியமுண்டு !
இனி ஒரு பஞ்சமில்லை !
வளமுண்டு ! 
இனி ஒரு விரோதமில்லை ! 
அன்பு உண்டு !
இனி ஒரு சோம்பலில்லை ! 
விழிப்புண்டு !
இனி ஒரு அறியாமையில்லை !
ஞானமுண்டு !
இனி ஒரு சந்தேகமில்லை ! 
சமாதானமுண்டு !
இனி ஒரு வீழ்ச்சியில்லை !
எழுச்சி உண்டு ! 
இனி ஒரு நஷ்டமில்லை !
லாபமுண்டு !
இனி ஒரு கடனில்லை !
தானமுண்டு ! 
இனி ஒரு அதர்மமில்லை ! 
தர்மமுண்டு ! 
இனி ஒரு தோல்வியில்லை ! 
வெற்றியுண்டு !
இனி ஒரு துக்கமில்லை ! 
ஆனந்தமுண்டு !
இனி ஒரு ஏமாற்றமில்லை !
மாற்றமுண்டு !
இனி ஒரு அவமானமில்லை !
மரியாதையுண்டு !
இனி ஒரு ஏழ்மையில்லை ! 
நீங்காத செல்வமுண்டு !
இனி ஒரு ஆபத்தில்லை !
அமைதியுண்டு !
இனி ஒரு இருட்டில்லை !
விடியலுண்டு !
இனி ஒரு விபத்தில்லை !
முன்னேற்றமுண்டு !
இனி ஒரு கோபமில்லை !
குணமுண்டு ! 
இனி ஒரு மன உளைச்சலில்லை !
தியானமுண்டு !
இனி ஒரு ஊனமில்லை !
உறுதியுண்டு !
இனி ஒரு தயக்கமில்லை !
சந்தர்ப்பமுண்டு !
இனி ஒரு அசட்டுத்தனமில்லை !
சாமர்த்தியமுண்டு ! 
இனி ஒரு பசியில்லை !
ஆகாரமுண்டு ! 
இனி ஒரு துரோகமில்லை ! 
உதவியுண்டு ! 
இனி ஒரு தீமையில்லை !
நன்மை உண்டு ! 
இனி ஒரு அழிவில்லை !
ஆக்கமுண்டு ! 
இனி ஒரு அழுகையில்லை !
பிரார்த்தனையுண்டு ! 
இனி ஒரு குறையில்லை !
நிறையுண்டு !
இனி ஒரு வெறுப்பில்லை !
பக்தியுண்டு ! 
இனி ஒரு பாவமில்லை !
சத்சங்கம் உண்டு !
இனி ஒரு தனிமையில்லை !
பக்தர்களுண்டு ! 
இனி ஒரு கவலையில்லை !
சரணாகதி உண்டு ! 
இனி ஒரு தேவையில்லை !
வாழ்வு உண்டு !
இனி ஒரு காமமில்லை !
ஜீவகாருண்ய வழியுண்டு ! 
இனி ஒரு மரணமில்லை !
சிதம்பரம் இராமலிங்க அடிகள் துணை என்றும் உண்டு!  
"அருட்பெருஞ்ஜோதி ஜபம் உண்டு !
திருவருட்பா  உண்டு !
சுமரச சுத்த சன்மார்க்கம் உண்டு ! 
இனி நிச்சயம் நிம்மதி உண்டு! 

No comments:

Post a Comment