Tuesday, February 15, 2011

Art of Listening / கேட்பது என்பது ஒரு கலை



பேச்சுக் கலை என்பது சாதாரணமான ஒன்றல்ல. எல்லோராலும் மனதில் நினைப்பதைச் சரியாக சொல்லி விட முடியாது. பல வேளைகளில் நான் தடுமாறித் தவிப்பதுண்டு. மனதில் தோன்றுகின்ற சிந்தனைகளை, எண்ணங்களை முழுதாகச் சொல்ல முடிவதில்லை. நாம் நினைப்பது ஒன்று ஆனால் சொல்ல முயற்சிக்கும் போது வார்த்தைகள் மாறி
வேறொன்றாக வந்து விழுந்துவிடும். உரையாடலின் முடிவில் சொல்ல வந்ததை முழுசாகச் சொல்லவில்லையே என்ற விரக்தி தோன்றும். இந்தப் பேச்சுக் கலையை விடை மிகக் கடினமானது கேட்கும் கலை.

ஒருவர் பேசுவதைக் கேட்பதில் என்ன சிரமம் இருக்கப்போகின்றது என்று சாதாரணமாக நினைத்து விட முடியாது.பிறர் பேசுவதை நாம் கேட்கும் போது நாம் நமது மனதின் எண்ணங்களோடு சேர்த்தே தான் கேட்கிறோம்.

பேசுபவரின் சொற்களோடு நமது மனதின் தன்மைகள் கலந்து பல விதமான வியாக்கியானங்களை அந்த பேச்சுக்குக் கொடுத்துக் கொண்டே தான் கேட்கிறோம். பல வேளைகளில் பேசுபவர் பேசிக் கொண்டேயிருப்பார். நமது முகம் மட்டும் கேட்பது போல பாவனை செய்து கொண்டிருக்கும்; ஆனால் மனம் அந்த பேச்சில் லயித்து இருக்காது. பல
வேளைகளில் சொல்பவர் சொல்வதை நமது மனதிற்குப் பிடித்த வகையில் மாற்றி வேறு விதமாக வியாக்கியானம் செய்து கொள்வோம்.

ஆக கேட்பது என்பது சுலபமான ஒன்றல்ல என்பது நாம் நமது மனதின் ஓட்டத்தை உற்று நோக்கினால் தெரிய வரும். கேட்பது என்பது ஒரு கலை. அந்தக் கலையை முறையாகப் பழகத்தானே வேண்டும்!


More Info :http://ksuba.blogspot.com/2003/09/art-of-listening.html

No comments:

Post a Comment