Monday, April 25, 2011

இசையை விட்டுவிடுகிறேன் இளையராஜா சவால்

ராஜாவை மேடையில் பார்ப்பதென்பது அரிதானது. அப்படியே வந்தாலும் சொற்ப வார்த்தைகளுடன் தனது உரையை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிடுவார். ‘அழகர்சாமியின் குதிரை’ படவிழாவிலும் அதன் தொடர்ச்சியாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் ராஜா நடந்துகொண்ட விதம் இதுவரை காணாதது. சுனாமியும், அமைதியும் கலந்த கலவையாக இருந்தது அவரது பேச்சு.
எத்தனையோ குப்பை படங்களுக்கு இசையமைத்துவிட்டேன். நல்ல படங்களுக்கு இசையமைக்கும்போது மனசுக்கு திருப்தியா இருக்கும். சுசீந்திரன் இயக்கியுள்ள அழகர்சாமியின் குதிரை ஒரு முக்கியமான படமாக இருக்கும். இன்னிக்கு காலையிலதான் டைட்டில் பாடலை முடித்துவிட்டு இங்கு வந்திருக்கேன். இந்த படம் பார்க்கும்போது இந்த பாடலுக்கான இசையை உங்க மொபைல் போனையெல்லாம் ஆஃப் பண்ணிவிட்டு கண்ணைமூடி கேளுங்க. உங்க கண்ணிலிருந்து நாலு சொட்டு தண்ணீராவது வரலைன்னா நான் இசையமைப்பதையே விட்டுவிடுகிறேன்.

இந்த மாதிரி இசையை நானாக கொடுப்பதில்லை. நல்ல கதைகளே நல்ல இசையை தானாக உருவாக்குகின்றன. அழகர்சாமியின் குதிரை கதை அப்படியொரு சந்தர்பத்தை கொடுத்துள்ளது. இந்த மாதிரி படத்தை எடுக்க முன்வந்த தயாரிப்பாளர் மதனுக்கு எனது பாராட்டுகள்.”என்ற ராஜா, கதையின் நாயகன் அப்புக்குட்டியை பார்த்து, “இந்த படத்துல நீ அருமையா நடிச்சிருக்க. அதுக்காக உன்னை சூப்பர் ஸ்டாருன்னு சொல்லிடமுடியாது. சூப்பர் ஸ்டாருன்னா
அவரு ஒருத்தர்தான். அதே சமயம் சூப்பர் ஸ்டாரால உன்ன மாதிரி நடிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்ப, அப்புக்குட்டியின் முகத்தில் ஆனந்த குதிரை துள்ளி குதித்தது.

More Info :

No comments:

Post a Comment