Wednesday, November 6, 2013

---திருமந்திரம்---

               
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல் 
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை  வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் 
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள் 
சென்னியில் வைத்த சிவனருளாலே 

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்
மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே

No comments:

Post a Comment